Thursday, July 17, 2014

புல்

 

 


மிதித்த போதில்

நசுங்கிப்போயின

நடைப்பாதங்களின்

வேகத்தால்

உடற்பருமனின்

பங்களிப்பால்

பசுங்குருதி பீய்ச்சின

மனிதர்கள்

மிருகங்கள்

மனிதமிருகங்கள்

புற்கள்

தொடர்ந்தும் தீக்குளித்தன

அறுகம்புல்

ஒருபோதும் சொன்னதில்லை

நான் சாமிக்கு மட்டும்தானென்று

உதைவாங்கிய பச்சையங்கள்

ஒருசேர எழுந்தன

எதேச்சாதிகாரத்திற்கு எதிராய்
புளுக்கொத்தி தின்றுகொண்டிருந்த
குருவிகளுக்கோ
சிரிப்புத்தாங்க முடியவில்லை
ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment