Thursday, July 17, 2014

தீனி

 

 

மாமரத்து நிழலில்

மனிதன் என்னும் நினைவழிந்து

தூங்கிப்போனேன்

என்னைப்பற்றி

யாருக்கும் தீங்கிழைக்காத
இனிய பிறவி

குளிர்த்தி எறும்புகள்

முதலில் ஆரம்பித்தன

கொழுத்த கட்டெறும்புகள்

வன்மத்தால் சிவந்து

வெறுப்பை சுமந்து ஊர்ந்த

வேற்றெறும்புகள்

மொய்த்துக் கடித்து மேய்ந்தன

எஞ்சிய என்

மாமிசத்தை தூக்கிக்கொண்டு

எப்படியோ தப்பிவிட்டேன்

ஆனந்த பிரசாத்

No comments:

Post a Comment