Thursday, July 17, 2014

தென்றல்

 

 

எரிந்துகொண்டிருக்கும் போது

வேண்டாம்

இருப்பழிகிறது

புல்லாங்குழலினுடு மூச்சு

ஏதொரு சுரத்தையும்

இசைக்கப்போவதில்லை

உயிரை இழுத்தோடமுயலும்

காற்றை

ஏழு சமுத்திரங்களிலும்

எத்திய அலைகள்

திரும்பத்தரும்

வீழ்ந்து கிடக்கும்

நான்

எழுவதிலேயே

எல்லாம்

தொக்கி நிற்கிறது
  • Pena Manoharan 'வீழ்ந்து கிடக்கும் நான் எழுவதிலேயே.......’அருமை.வாழ்த்துகள் வையைக் கரையிலிருந்து ஆனந்த் பிரசாத்.
  • Santhiya Thiraviam அருமை.வாழ்த்துகள்!!
  • Vanitha Solomon Devasigamony நம்பிக்கையூட்டுகின்ற வரிகள் ! "உயிரை இழுத்தோடமுயலும்
    காற்றை , ஏழு சமுத்திரங்களிலும் எத்திய அலைகள் திரும்பத்தரும்;
    வீழ்ந்து கிடக்கும் நான் எழுவதிலேயே எல்லாம் தொக்கி நிற்கிறது"
  • VJ Yogesh 'வீழ்ந்து கிடக்கும்

    நான்
    ...See More
  • Thiru Thirukkumaran நான்

    எழுவதிலேயே


    எல்லாம்

    தொக்கி நிற்கிறது//
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "///வீழ்ந்து கிடக்கும்
    நான்
    எழுவதிலேயே

    எல்லாம்
    தொக்கி நிற்கிறது..." அருமை
  • Rajaji Rajagopalan இப்போதெல்லாம் ஆனந்த் பிரசாத் எழுதும் ஓவியங்கள் சல்வடோர் டாலியின் நீர் வர்ணங்களை நினைவுபடுத்துகின்றன. புரிந்துகொள்ள முடியும்போலவும் இருக்கிறது, புரிதலுக்கு அப்பாலும் தோன்றி மயக்கம் காட்டுகிறது. ஒரு ஓவியத்தில் ஓராயிரம் கற்பனைகள். மலைத்துப்போய் நிற்கிறேன்.
  •  
     

No comments:

Post a Comment