Monday, June 17, 2013

சூர்யநமஸ்காரம்.

 


எனக்காகவும்
ஒரு கீற்றைத் தெளித்த
நிலவை விழுங்கி
புளியேப்பம் விட்டன இரவுகள்...
பாலப்பத்தை
மிக நேர்த்தியாக
கபளீகரம் செய்தது
இருளின் நிழல்....
நிழலில் ஒதுங்கிய நிஜங்கள்
பகலுக்காய் பதுங்கின....!
இருப்பின்....இருப்பே.....நாளையென்று.....
பல்லைக்கடித்தபடி.....
கிழக்கொன்றும் புலரவில்லை
கீழ்வானின் செப்படிவித்தைகள்
சூம்பிப்போனது
சூரியனின் ரஸவாதங்கள்...
பாம்புப்பிடாரனின்
கீரிப்பிள்ளை விளையாட்டாக......
நான்.....
மேற்கில் உதிப்பதே மேல்!!!
ஆனந்தப்ரசாத்.
  • Nathan Gopal இருளின் நிழல்....
    நிழலில் ஒதுங்கிய நிஜங்கள்
    பகலுக்காய் பதுங்கின....!
  • Subramanian Ravikumar சூம்பிப் போயின என்றிருந்தால் பிழையின்றி இருக்கும். ஒருவிதமான அரசியல் தன்மையிலும் கவிதை அமைந்துள்ளது, கிழக்கின் போராட்டங்களின் மீது இழந்த நம்பிக்கையாய்க் கவிதை வெளிப்பட்டுள்ளது. மேற்குலக வாழ்வோடு நீங்கள் மேலும் இயைந்து கொண்டிருப்பதை இது குறிப்பிடுவதாக நான் புரிந்துகொள்கிறேன்... ஆனந்த்...
  • Rajaji Rajagopalan ஆனந்த் போன்றவர்களின் கவிதைகளை விளங்கிக்கொள்வது எத்துணைக் கடினமான காரியம் என்பதை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். அதனாலேயே இவரின் இக்கவிதையையும் மிக அவதானத்துடனேயே அணுகினேன். ஆனால் நான் புரிந்துகொண்டவரையில் அன்பர் Subramanian Ravikumar அவர்கள் கூறுயதுபோல் அரசியல் எப்படி இங்கே நுழைந்ததெனக் கண்டுகொள்ளுமுடியாமலிருக்கிறது. திரு சுப்பிரமணியன் வலியச் செய்துகொண்ட Interpretation ஆக இருக்குமோவென ஐயுறவேண்டியிருக்கிறது. ஆனந்த்தான் இந்தச் சிக்கலை விடுவிக்கவேண்டும்.
  • Anand Prasad இதில் சிக்கலொன்றுமில்லை!
    இன்று மாலை நான் செக்கிழுத்துவிட்டு திரும்பிவரும்போது
    ஜல்லிக்கட்டுக்காளையாக புல்லுக்கட்டைத்தேடி கும்பகோணத்து
    தெருக்களிலே புழுதியிறைத்து நடந்துவரும்போது......
    அள்ளிக்கட்டிய அடிநாளின் அம்சங்கள் மல்லுக்கட்டியது...!

    அதன் விளைவாய் மனத்திடை ஓர் பாட்டுக்கட்டியது.....அவ்வளவே.
    வேறொன்றுமறியேன் பராபரமே!!!
    தங்கள் மொழிபெயர்ப்புகளுக்கு மிக்க நன்றி.
  • N.Rathna Vel அருமை. நன்றி.
  • Thiru Thirukkumaran பாம்புப்பிடாரனின்
    கீரிப்பிள்ளை விளையாட்டாக......
    நான்.....
    மேற்கில் உதிப்பதே மேல்!!!// great
  • VJ Yogesh //இருப்பின்....இருப்பே.....நாளையென்று.....
    பல்லைக்கடித்தபடி.....// //பாம்புப்பிடாரனின்
    கீரிப்பிள்ளை விளையாட்ட
    ாக......
    நான்.....
    மேற்கில் உதிப்பதே மேல்!!!// ஒரு பாசங்குமில்லாமல் யதார்த்தத்தை கூறிய விதம் அருமை அண்ணா..!
  • Jeyarany Norbert பாம்புப்பிடாரனின்
    கீரிப்பிள்ளை விளையாட்டாக......
    நான்.....
    மேற்கில் உதிப்பதே மேல்!!! Very nice
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan இரசித்தேன் வரிகளை...."புளியேப்பம் விட்டன இரவுகள்...
    பாலப்பத்தை
    மிக நேர்த்தியாக.."

உறைவிடம்


 



எனது சாளரத்தின் வழியாக

வரும் காற்றைக்கூட....நான்

நம்பியதில்லை

நீரோடித்தெளிந்த நிலைகளையும் கூட...!

பாடிப்பாடியே...

குரல் நாண்கள் அறுந்த பின்னும்

வீடு சுமக்கும் எத்தனங்கள்...

இந்த நாள் மிதக்கும்

என் சுமைகள் ஆழ்ந்தமிழாது......

ஆழ்கடல் பூக்கள்

என்னைக் கரை தள்ளும்.....

இயங்கியலின் சாராம்சம்

இருப்பை நிலை நிறுத்தும்....?

கேள்விகளுக்குள்ளே குறுகியாயிற்று.

என்னை பரிகசித்தேகும்

ஆற்றின் சுழிப்பிற்குள்

அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

வேருக்கடியில்........

மனிதரை புரிந்துகொண்டேன்.

ஆனந்தப்ரசாத்.




  • Rajaji Rajagopalan எனது சாளரத்தின் வழியாக

    வரும் காற்றைக்கூட....நான்

    நம்பியதில்லை...//


    தொடக்கமே சிந்திக்கவைக்கிறது!

    .... ஆழ்கடல் பூக்கள்

    என்னைக் கரை தள்ளும்.....//

    இப்போது நம்பிக்கை துளிர்க்கிறது!
    இறுதியில்...

    மனிதரை புரிந்துகொண்டேன்...//

    திருப்தியான முடிவு! சிந்தனைக்கு நிறைய வேலை தருகிறார், ஆனந்த்.

  • Nathan Gopal ஏதோவொரு நாணலின்
    வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன். //கவிதை மிகவும் நுண் தன்மையுடன் தூக்கலாக எழுகிறது.

  • Pena Manoharan அடடா...’என்னைப் பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு...ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்... மனிதரைப் புரிந்து கொண்டேன்’ படமெடுத்தாடுகிறது படிமப் பாம்பு.அருமை.வையைக் கரையில் வாசம் செய்யும் அநுராதபுரத்தானின் நல்வாழ்த்துக்கள்.

  • Subramanian Ravikumar உள் முகப் பயணம்...முடிவற்றது வாழ்வெனும் தேடல்...

  • Thiru Thirukkumaran இயங்கியலின் சாராம்சம்

    இருப்பை நிலை நிறுத்தும்....?

    கேள்விகளுக்குள்ளே குறுகியாயிற்று.//

  • N.Rathna Vel அருமை.

  • Vanitha Solomon Devasigamony பாடிப்பாடியே...
    குரல் நாண்கள் அறுந்த பின்னும்
    வீடு சுமக்கும் எத்தனங்கள்...

    என்னை பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு....

    ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன்.

  • VJ Yogesh 'ஆற்றின் சுழிப்பிற்குள்

    அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

    வேருக்கடியில்........
    ...See More

  • Kuppilan Shanmugan valvin thedalai arumaiyagach solliullirkal,

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "என்னைக் கரை தள்ளும்.....
    இயங்கியலின் சாராம்சம்
    இருப்பை நிலை நிறுத்தும்....?" நுணுகி அனுபவிக்க வேண்டிய கவிதை. வாழ்த்துக்கள்

  • Santhiya Thiraviam ஆற்றின் சுழிப்பிற்குள்

    அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

    வேருக்கடியில்........


    மனிதரை புரிந்துகொண்டேன்.

    Arumai Aumai

  • Santhiya Thiraviam வாழ்த்துக்கள்

  • Jeyarany Norbert பாடிப்பாடியே...
    குரல் நாண்கள் அறுந்த பின்னும்
    வீடு சுமக்கும் எத்தனங்கள்...
    என்னை பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு....
    ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன்.அருமை வாழ்த்துக்கள்.

  • Subramaniam Kuneswaran "என்னை பரிகசித்தேகும்
    ஆற்றின் சுழிப்பிற்குள்
    அகப்பட்டு...."

  • Kannathasan Krishnamoorthy கடவுளாலையே மனிதரைப் புரிந்து கொள்ள முடியாத இவ்வுலகில் நீங்கள் என்னமோ மனிதரைப் புரிந்து கொண்டது சாதனை தான்.வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் ஆழமான கவிதைக்கு...