Tuesday, March 20, 2012

Vision of love

The balcony I was sitting on
The woods ripped off and lots of hole
Every step is turbulent
You are the one holding my soul
Sitting in front of a green meadow
Watching the recreation of the sparrow
Whenever the projection of my images narrow
You are there to wipe off my sorrow
Up on the sky is so scrambled
Like my thoughts sometime crumbled
A well composed person.... I want to be
Without a hold of you I always tumbled
Whenever a cool breeze embraces me
My senses crave for you to be
Extreme measures of sadness occur
You always eagerly await me to see
While you were walking
I had a glimpse of your feet
The heated tar... melts the road
I wish those feel like a sleet
Songs pouring in my heart
Language waiting for my usage
Since I am in love with you
Signified...nothing to be a sage!!!
You have marinated me
through my heart, flesh and skin
What else I can say?
the minerals make me so thin!!!
Anandprasad







Vacuumilation


The world.....
I have been introduced at birth
irrationally vanished away
from the planet earth
So many things crisscrossed
due to the human greed
Soulfully I believe
there won't be another breed
Through my shallow grave
my soul can be redefined
If that so in any means...
wouldn't that be so divine?
Each and every corner
that I have crawled on my land
buried indefinitely underneath
caused by a huge storm of sand
Any miracle be performed
outrageously unleashed the rage
Ultimatum..... allows blood shed
never written on victory's last page
Risen from the grave .....
or my belief in reincarnation
restore the value of love
reborn with a loving nation.
Anandprasad.

Wednesday, March 14, 2012

கடிதம்


''சுதந்திர வாசம்'
'பழைய வீதி.
தொலை(ந்த) தேசம்.
00.00.0000
நண்பனுக்கு,
'பிரிய' என்று நீ விளித்திருந்தாய்......!
இருபத்தைந்து வருடங்களின்
பிரிந்தென்ன....விட்டென்ன.....
பிரியங்களுக்கே
பிரியமில்லாது போய்விட்ட
சீவிய விசித்திரங்களின் பிறகு?
நானும் வாழ்கிறேன்
நீயும் அதுபோலவே....
பிறகுநலத்தை அவாவி
என்ன கிழியப்போகிறது?
இங்குஎல்லாம் வழமையேபோல்....
ஓசை
பேரோசை
அலறல்
வீரிட்டலறல்....
பாக்கு வெட்டிக்கும்
சீவல் பாக்கிற்கும்
நடுக்கூறிலுள்ள
திரிசங்கு சொர்க்கம்!
ஆண்டுக்கு விசேஷங்கள்
வருகிறதோ இல்லையோ
ஆண்டுத்திவசங்கள்
ஆயிரம்....ஆயிரம்.
கடைசித்துளிக் கண்ணீரை
சேமித்துக் கொள்ள வேண்டி
மெளனம்...மெளனம்....மெளனம்!
விழிநீர் ஊறுமா ஊறாதா
என்பதுஎனது பிரச்சனை
உன்னுடையது
'கியூபெக்' தேறுமா நாறுமா
என்பதாக எழுதியிருந்தாய்
அங்கும் உனக்கும்
நில நடுக்கம் என்றறிந்து
மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
நள்ளிரவில் வேலை முடித்து
'மெத்ரோ' என்ற ஒன்றில்
திரும்பி வரும்போது
யாரோ ஒரு தோற்தலையன்
இருபத்தைந்து சதம் யாசிக்க
நீ.........யோசிக்க .....
உன்மேலுதடு வெடித்துப்போனதாக
எழுதியிருந்தை நான் வாசிக்க...
பேரானந்தக்கடலில்
அமிழ்ந்துபோய் விட்டேன்!
இருப்பினும்....
அன்னை வளர்ப்பின் நாகரீகம் கருதி.......
''நண்பா, இப்போதுநலமா.....
புண் ஆறிற்றா?''
இங்கேதான்ன பிச்சை
இருட்டியென்று பார்த்தால்
அங்கேயும் அதே கதைதான்
அலைகடலைத் தாண்டியென்ன?
நான்எனது தேசத்திலும்
நீ பரதேசத்திலும்
அனாமதேயங்கள் தான்!
நீ எப்போதும்
(நான் எப்போதாகிலும்)
பருக்கைக்காக மட்டுமே
வாய்திறப்பதையும் அறிந்தேன்
இருப்புக்காகத் திறந்தவனோ
இங்கேயும் அங்கேயும்.....
யாரும் இன்னமும்
உரிமை கோரவில்லையாம்!
சனநடமாட்டமிக்க
நட்ட நடுத்தெருவில்
வயிற்றெரிச்சலில்
மலம் கழித்துவிட்டுப்போனதற்கு
எந்த நாய் தனது
கழிப்பிற்காக
கழிவிரக்கப்பட்டிருக்கிறது?
இங்கேயும் எரிந்தது
அங்கேயும் எரிகிறது
தீ.... ஒன்று விலாசம் வேறு
முகவரி இல்லாதவர்களினால்
மூண்ட தீ பற்றியெழுதினாய்
படித்தேன் தித்தீப்பாகவிருந்தது.
நாங்கள் வழமையேபோல்
ஒத்த கருத்துள்ளவர்களிடம்
ஆக்ரோஷமாக கத்தியும்
ஒத்தோடிக்கொண்டிருப்பவரிடம்
ஒத்தூதிச்சுத்தியும்
இருப்பை நிலை நிறுத்துவோம்!
சொறிந்து கொடுத்துக்கொண்டும்
சொறிய விட்டுக்கொண்டும்
சுகத்தில் லயிப்போம்.
எனது கடிதம்
உனக்குகுரூரமாகப் படுமாகில்.......
இன்னமும் நீ கொஞ்சம்
மனிதனாகத்தானிருக்கிறாய்!
இந்தக்கடிதத்தை
இருட்டிலிருந்தே எழுதுகிறேன்
ஓநாயைவிட என் கண்கள்
இருளில் துல்லியமாய்
எதையும் பார்க்கும்...
கூர்ப்பில்
மனிதப்பிராணியாகிவிட்டேன்
கடிதம் நீண்டுவிட்டது
கிடைத்தால்.....எழுது
கிடைத்தால் எழுதுகிறேன்.
இப்படிக்கு..........
பி.கு;
நீ அங்கு கட்டப்பொம்மு வேடம்கட்டி
வசனங்கள் விசிறுவதாக எழுதியிருந்தாய்
திறம்பட நடி!
வாழ்த்துகள்.
இங்கு நான் தூக்கில் தொங்க அது உதவும்.
{1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து
எனது பால்ய நண்பனின் கடிதம்.....
Tsunami யின் எச்சசொச்சங்களாய்நேற்று எனை எட்டியது.}