Friday, January 25, 2013

ஆவர்த்தனம்

 



ஆறாம் பராயத்தில் ஆசையெழும்!....பால் மணமே
மாறா முகத்தில் பயிர்விளைக்க! மீசையொடு
தாடியென.....எந்தன்
தந்தையிடம் திருடிக் கண்ணாடியிலே...
'கமலின்' காட்சிப்படம் தெரிய....
வருத்தி....வருந்தி... வழித்ததனால் ஏதுமொரு
விருத்தியும் அன்று விளைந்ததில்லை!
அதுவாக....
ஏழாண்டின்பின் மெல்ல என்தவமாய் எட்டியது
காளான் குடையோடு காற்சட்டைக் குள்ளிருந்து
விடுதலை தேர்ந்த வீரியக் கூடாரத்தால்
கடுகதியில் மேலும் அரைக் காற்சட்டை அணிதலென
நிர்ப்பந்தமாயிற்று!
நீண்டு சில காலங்கள்
அர்த்தமே இல்லாது அபத்தமும்... அசட்டுத்
தனங்களும் வெருளித் தன்மைகளும் அகலாத
கணங்கள் ஒவ்வொன்றும் கனவாக.....வாழ்வில்
முழு வாலிபம் வந்து முட்டியது.....இன்பத்தை
தழுவாது போய்விடுமோ....
தளிர்ப்பின் தாற்பர்யம்
எழுவானின் பரிதியென ஏறிவர...ஆசைகளோ
பழுதான கடிகார படபடப்பாய் ஒடுங்கின.
தருணங்கள் வாழ்நாளின் தலையில்
வகிடெடுக்க...
வருநாட்கள் செலவோ...வரவுகளோ இல்லாது
தேச வரைபடத்து தெருக்களாய் கிளைத்தன
ஆசைப் படகோ...அகப்பட்ட நீர்ப்பரப்பில்
திசைகாட்டி இல்லாதே தியங்கி
மனவெளியில்
இசைபாடி...வசைபாடி...இயலாமை தேர்ந்தவொரு
வரைகோட்டில் நகரும்!
வழமைபோல்...கேசத்து
நரைகூடும்... அப்பனிடம் நான் திருடி என்னழகை
செப்பனிட முயன்ற செயல்களெல்லாம் அகத்தை
கப்பியபடி நெஞ்ச கல்லுருக்கும்!!!
இனிமேலும்.....
எஞ்சி இருக்குமென் இளஞாயிறின் காலம்
மஞ்சம் நிறைந்த மலர்.
பின்குறிப்பு:
இப்போது என் பேரன்
இல்லாத மீசையை
மழிக்கும் எத்தனத்தில்
மகிழ்ந்து போகிறானாம்!!!
ஆனந்தப்ரசாத்.




  • Aangarai Bairavi Kaththi pondru koormaiyana kavithai. Sila paruvamum appadithaan ena ninaikka vaitha padaippu.(anna! Oru thirutham."veguli"ena varavendiya idaththil "veruli" ena vandhirukku.

  • Pena Manoharan அண்ணன் தலைக்குத் தடவும் ‘பிரில் கிரீமை’ முகத்தில் தடவை மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.பேரனுக்கு வாழ்த்துக்கள்.தாத்தாவிற்கு நன்றிகள்.அருமை ஆனந்த் பிரசாத்.

  • N.Rathna Vel அருமை. வாழ்த்துகள்.

  • Arasan Elayathamby கவிதைமொழி கனமாக இருக்கிறது !

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan மிக அருமை. நினைவுகளில் திளைக்க வைக்கிறது

  • VJ Yogesh //வழமைபோல்...கேசத்து

    நரைகூடும்... அப்பனிடம் நான் திருடி என்னழகை

    செப்பனிட முயன்ற செயல்களெல்லாம் அகத்தை
    ...See More

  • Rajaji Rajagopalan என் மேல்வகுப்பு சகபாடிகள் அரும்பு மீசையுடன் வகுப்புக்கு வருவதைக் கண்டு நானும் மீசை முளைக்காத என் முகத்தைப் பார்த்து வெட்கப்பட்டு பள்ளிக்கூடம் போகாமல் விடுவோமோ என்றுகூட நினைத்தேன். பழைய நினைவுகளை மீட்டுவதற்கு உதவினீர்கள். நன்றி.

  • Vanitha Devasigamony அப்பனிடம் நான் திருடி என்னழகை
    செப்பனிட முயன்ற செயல்களெல்லாம் அகத்தை
    கப்பியபடி நெஞ்ச கல்லுருக்கும்!!! நன்றி ஆனந்தப்பிரசாத்

  • Anand Prasad Aangarai Bairavi தங்கள் வாசிப்பிற்கு நன்றி. 'வெருளித்தனம்' என்ற சொல்லாட்சி
    ஈழத்து வட்டார வழக்கு. வெகுளிக்கும், வெருளிக்கும் அதிக
    வித்யாசமில்லை. இரண்டும் கெட்டான்....என்னும் கருத்தில்.....
    நானும், நீங்களும் பதின்ம வயதுகளில் பட்டதே!


Wednesday, January 2, 2013

வீடுபேறு...முக்தி...மோக்ஷ்ம் இவைகளைப்பற்றி....!

 



கடிகாரத்தை
கொஞ்சம் நிறுத்திவிட்டு
இளைப்பாறலாமா பார்க்கிறேன்
காலக்குதிரை
பந்தயக் குதிரையானது
மூக்கின் வழியே புகைகக்கி
வாய்வழியே நுரை தள்ளி.....
நாடித்துடிப்பினும்
நான்கு மடங்கான
குழம்போசை எழுப்பிவெகு வேகமாக.....
என்னால் சேர்ந்து ஒடமுடியவில்லை
முன்நாளில் எனது
பெளதீக வாகனம் ஓடிய ஓட்டம்...?
இடப்புறமும் வலப்புறமும்
அலம்பல் வேலிகளும்
கிடுகு வேலிகளும்....
குடிசை, கல்வீடுகள்....
மதிற்சுவரில் ஒட்டிக்கொண்டிருந்த
சிவாஜி கணேசனும், எம்ஜீயாரும்
சரோஜாதேவியும், சந்தியா புத்ரியும்....
ஏன்....
இவர்களை முத்தமிட்டுக்கொண்டே
மோஹத்தீயில் வரண்ட
சாணிக்கட்டிகளையும் கூட....
படு வேகமாக பின்நோக்கித் தள்ளிவிட்டு
எனது வாகனம் பறந்துகொண்டிருந்தது
இப்போதோ.....நான்
நடுத்தெருவில்
தன்னந்தனியனாக.......
கார்களும், கட்டிடங்களும்
பேரோசைகளும், பெரு வெளிச்சங்களும்
எனக்கு இடமும் வலமுமாய்
அநியாயமாய் என்னை
பின்நோக்கி உதைத்துத்தள்ளிவிட.....
வழி மாறிப்போய்விட்டேன்!
முகவரியைக் காட்டி
மொழி தெரியாவூரில்
உதவி கேட்க எத்தனிப்பதற்குள்....
முப்பதுபேர்
தாண்டிப்போய்விட்டருந்தார்கள்!
முப்பத்தோராமவனை
சிக்கெனப்பிடித்தேன்
மூளையை குழப்பிவிட்டுப் போய்விட்டான்
இன்னமும் நான் நடுத்தெருவில்....
உண்டான நிலமும் கிட்டவில்லை
ஒண்ட வந்த புலமும்
ஒட்டவில்லை.....
நான்அலாஸ்கா போகப்போகிறேன்!
அநுபவங்களை ஆறுதலாக
எழுதலாமென்று ஆரம்பித்தால்......
''அவனுக்கும் அவளுக்கும்
அரும்பியது காதல்....'' என
முதல்வரியைத் துவங்க
அவனும் அவளும்
அடித்துப் பிய்த்துக்கொண்டு
ஆளுக்கொரு குழந்தையோடு
விவாகமும் ரத்தாயிற்று!
மீன் பிடிக்கலாமென்று
தூண்டிலை எடுத்துக்கொண்டு
கதவைப் பூட்டி
கிளம்புமுன் பார்த்தால்.....
அதுவே சமர்த்தாக வந்து
குழம்புக்குள் உட்கார்ந்திருக்கிறது.
'எள்' என்று வாயெடுக்க
நல்லெண்ணை புட்டியில்!
கடிகாரத்தை நிறுத்திவிட்டு
அலாஸ்கா போகிறேன்.
ஆனந்தப்ரசாத்.





  • Iniyavilamban Senthamilon சும்மாய் இருந்திருந்தாலே எல்லாம் சுபமாய் முடிந்திருக்குமே எதற்கு இவ்வளவு பறப்பு ?

  • VJ Yogesh காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.... புலம் பெயர் அவலத்தை சொல்ல வருகிறதா கவிதை?

  • Aangarai Bairavi Vegamana kavithai.el endraal ennaiyavadhu vazhvin sogamumdhaan. nammai varutheadukka.pulam perindhaalum thodarndhu thodarum namakkanavai. Ena en puridhalil nirkkiradhu azhagana ungal padaippu.

  • Gokul Salvadi காலம் மனத்தில் ஒடுக்கம் !

  • Arasan Elayathamby அலாஸ்கா ,,love that land! நல்ல சிந்தனை ! இந்த கவிதைக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடுகும் ( படம் ) என்ன தொடர்பு கவிஞ்சர்?

  • Gaandhi Baabu · Friends with Srinivas Kavenayam
    Engay sentraalum kaalakadighaaram nintru vittuviduma??!!!

  • Thiru Thirukkumaran கடிகாரத்தை

    கொஞ்சம் நிறுத்திவிட்டு

    இளைப்பாறலாமா பார்க்கிறேன்


    காலக்குதிரை

    பந்தயக் குதிரையானது//

  • Rajaji Rajagopalan இது புலம்பெயர்ந்த அவலமிலை, பிறந்த நாட்டுக்குப் போனீர்களோ சிவாஜிக்கும் எம்ஜீக்கும் பதிலாகப் புதியவர்களைப் பார்ப்பீர்கள். அவ்வளவுதான் வித்தியாயம். இந்த எண்ணற்ற அவஸ்தைகளிலிருந்து தப்புவதற்கு அலாஸ்கா போவதுதான் ஒரே வழி. கடிகாரத்தை நிறுத்திவிட்டு...//

  • Anand Prasad Arasan Elayathamby: excellent question raised about my writing. Thank you for your observation.
    Based on the reminiscence of my childhood Physics (taught by P.K.Balasingam), this formula is related to the theory of relativity.
    I used this as a metapho
    r. E=mc^2 states that objects moving at the speed of light gains mass....and energy....
    In other words, the faster the objects travels, the heavier it becomes.....
    In this poetry, the object is me who seeks refuge from outer world that doesn't belong to me.
    In order to secure myself, I'm travelling at a very high speed (c^2) to catch up with the contemporary pace.
    Consequently, as my speed increases, my "mass" of struggle and the waste of energy (E) proportionally increases.
    Hope you could establish the ironic relationship between the snail (top image) and the famous Einstein's equation.
    (The word "pace" I refer to besides all the common problems around the world is....the search for human dignity and peace.)
    By the way my friend, I'm amazed by your diligence in your Tamil literature acquisition.
    Be proud to be a Centralite...as I am.

  • Arasan Elayathamby " In this poetry, the object is me who seeks refuge from outer world that doesn't belong to me."..you are digging into next level Mrarks Planks¨s Quantam physics!,,so to speak Amazing

  • George Singarajah மனசு மட்டும் பாரமாய் எனக்கு இருந்து கொண்டிருக்கிறது ...எதையோ இழந்த தவிப்பு எனக்கு இன்னும் அடங்கவில்லை ...