Thursday, July 17, 2014

காதல் நிலவே

 

 




கண்ணாமூச்சியாடும்

சூரியன் தயவில்

காணவொண்ணா நிலவு

நட்சத்திரங்கள்

நீலப்படுதாவில்

நிறைந்திருந்தன என்பது

என்வரையிலும் பொய்யே

காதல் மீதுரப்பெறின்

புறுபுறுக்கும் பழைய கட்டில்

எப்போதாவது

இடம்பெறும் உற்சவம்

இருளில் எழுந்து

இருளில் வந்து விழுவது

எங்களிருவரின் அன்றாடம்

நல்லவேளை

பள்ளியில்

அரிவரி இல்லாமல் போனது



ஆனந்த பிரசாத்

No comments:

Post a Comment