Sunday, November 27, 2011

உலகம் தழுவிய ஒட்பம்.





















என்றோ...எப்போதோ
ஏதோவொரு பறவையின்
எச்சத்தால் பாறையின்மேல்
உயிர்த்துப்படர்ந்து ....அகன்ற
கொடிநாம்!!! உயிர் வேர்கள்
குன்றின் நீர் குடித்து
குளிர்ந்தனவா?  அல்லவெனில்
எம் தண்மை கல்லுக்குள்
ஈரம் நுழைத்ததுவா?


பசியநிறப்பாறைகளை
பசியாற வைத்தவர் நாம்!
கசியும் எமதுதிரத்தால்
பூகோளம் சிவந்தது காண்!!!


எச்சத்தின் வழிவந்த
எச்சங்கள்.........இன்றுலகின்
மிச்சத்தை உண்ணுகிற
மிலேச்சர்க்காய்ப் போராடும்.


பாறைவழி வந்தவர் நாம்
பசி...தாகம்...தாங்கவென
நூறுவழி உண்டு! .....நுண்
உருக்கொள்ள........வேரறுந்து
நாறினும் நாம் உய்வோம்
நாளை உலகுய்யவென.


கணத்துள் முகம்.....நூறு
காட்டும் வியாபாரம்.....எம்
நிணத்துள் புழுவாய்நுழைய
நினைத்தாலும்.....அனுமதியோம்!

Wednesday, November 23, 2011

நிதர்சனம்.













தத்துவங்களால்
தத்தெடுக்கப்பட்டவர்களுக்கும்
தத்துவங்களிலிருந்து
தப்பித்து
வந்தவர்களுக்கும்.... இடையே
தர்மயுத்தம் நடக்கிறது!
முரண்பாடுகள்;
சரிவுகள்;
சலிப்புகள்;
சிலர் தலைமறைவு....
பலர் தலைகள் மறைவு.

நண்பனே!
காற்று எனது கவிதைகளைச்
சுமந்துகொண்டு
கைவீசி நடக்கும்!

சிருஷ'டிகளைச்
சீவியத்தில் நேசித்தவன்
மரணத்தின் பின்
சிருஷ'டிக்கப்படுகிறான்!
தோள்களில்
சுமக்கப்படும்போதுதான்
உயிர்த்தெழுகிறான்.
சிறகுகளை
உதிர்த்துவிட்ட பிறகுதான்
பறக்கவே ஆரம்பிக்கின்றான்!

ஆம்!
இந்த ஆயுதவேதங்களால்
வரையறுக்கப்பட்ட
துப்பாக்கித் தீர்வுகள்
துர்ப்பாக்கியமானது!

இருப்பினும்
இருப்போம், இருப்போம்!!
காற்றிலிருக்கும்
எனது சொற்களை
காலம் மீட்டெடுக்கும்!!!

-ஆனந்த் பிரசாத்-
தேடல் பெப்ரவரி 1990

Tuesday, November 22, 2011

முலாம் பூசாத வார்த்தைகள்.

 


சன்னம் பாய்ந்த என்

இடதுகாதில் --- ஒலி

சந்தேகப்பட்டது!

சங்கீதமா...... இல்லை

சங்கேத வார்தைகளா?

************

பதின்ம வயதுகளில்

பள்ளி வழக்கொழிந்தேன்.

ஊருக்கும் ஒளித்தேன்

உவந்தேன்...இருப்பழிய.

**************

பால்யத்து நட்பொன்று

கடற்கொள்ளையன் போன்று

மாறுவேடத்தொரு கண்

மறுகித் திரைபோட்டு

பொம்மைத் துப்பாக்கியுடன்

''போஸ்'' கொடுத்த புகைப்படத்தை

அம்மம்மா காட்டினாள்

அகமகிழ்ந்து பேரனுக்காய்

அர்ச்சனைகள் செய்தாள்.

ஐயர் ப்ரசாதங்கள்

அஞ்சலிலே பறந்தது.

பேய்களை ஆற்றுப்படுத்ததும்

பெருவிழவாம் என்றுரைத்தாள்

வாயடைத்துப்போனேன்!!!

வந்ததுவோர் சந்தேகம்?

என் துவக்கு நிஜமா........!?!?

இல்லை.....என நாள்போக...

நன்கு தெரிந்துகொண்டேன்.

நானே நிஜம்........வெறும்

நிஜத்தின் நிழலல்ல.

சப்பரத்தில் நீர் போகும்

சகடைதான் நானென்று

அப்புறமாய்த்தான் உணர்ந்தேன்

அந்தோ..................

யாருக்கோ------நான் இறப்பை

யாசித்தேன்!.......விழல்மரத்தின்

வேருக்கு நீராகி

வீணானதென் வாழ்வு.

ஊனமுற்றூருக்குள்

உயிர்தரித்து உலவவர.....

மானமற்ற துரோகியென

மரியாதை.......! நீர் பெற்றுக்

காவு கொடுத்த உயிர்

கணக்கில்லை..... என்வரையில்

சாவு அதுவாக வந்து

சாகாதது தான் எந்தன் சாபம்!!!







Friday, November 4, 2011

நேற்றைய போராளி!
















மழைக் கை பிடித்து சில
அடிகள் நடந்தேன் - வந்த
மலைப்பால் நடை குளிர்ந்தேன்!
கழையைத் துணையாய் எந்தன்
கக்கத்துள் வைத்தேன் அந்தக்
களையால் உடல் தளர்ந்தேன்.
விழையும் திறன் மீண்டும்வர
விசையுந்திப்போய் நொந்து
வலியாலறிவழிந்தேன்.
நுழையும் வழி தெரிந்தும்....நூல்
நுழையாத ஊசியின் கண்
பிழையாலழிந்தொழிந்தேன்.

கனவாகி இவையாவும்
கழிந்தோடிப்போயின - பின்
கனடாவில் கால்பதித்தேன் - வெறும்
நினைவாக இவையாவும்
நின்றுவிட.....நீள்கனவின்
நினைவுகளை நான்மதித்தேன்.
அனல்வாதம் புனல்வாதம்
அடிபட்டுப்போனாலும்
அகதியாய்ப் பரிணமித்தேன்
இனவாதம் பிடிவாதம்
இவையெல்லாம் போய் இளகி
இதமாகிப் பரிமளித்தேன்.

வயதொன்று போகும்! ஒரு
வருடம் கடந்தால்...... அது
வரலாறு..... என ஏகுமே!
நயமோடு நஷ்டமும்
நன்மைதான்.....என்றால் - சில
நிம்மதிகள் வரவாகுமே.
பயனொன்று வாழ்வினில்
பயந்ததென்றால்..........சொந்த
பந்தங்கள் உறவாடுமே
சுயலாபத்திரையில்........சில
சித்திரம் தீட்ட - உற(வு)
உறவாமல் மனம் வாடுமே.

உன்மத்தம்..... என் மத்துள்
உழன்றுழன்று கடைந்ததில்
உயிர் தயிரில் நெய்யானது......இனி
ஐன்மத்தில் உயிர்கொல்லும்
எண்ணம் வலுவிழந்தென்
ஏகாந்தம் மெய்யானது
வன்முறையால் தீர்வுகளே
வாராதென்றோரறிவு
வந்ததுகாண்.......பொய்யானது
என்வரையில்.....தோற்றுவிடும்!
ஏதமிலாதென்னுள்ளில்
எழுநம்பிக்கையானது.

கண்கெட்ட பின்பு.......வரும்
கதிரவனைக் கண்டுவிட
கனகாலம் வீண்டித்தேன்!
பண்கட்டிப் பாட்டெழுதும்
பயனிலதோர் பாவலனாய்
பலகாலம் பாழடித்தேன்
வெண்கட்டியோடொருகால்
வேள்விகளைக்கரும்பலகை
வேர்க்கக் கதையளந்தேன்
என்கட்டிலிதுதான்!....... இதை
இனிமூடு.......! ஆணியடி!!!
என்றுநான் கண்வளர்வேன்!!!
ஆனந்தபிரசாத்.

"war"anti!


















Take your time....until your ego satisfies
don't even take a moment to sacrifice.
whatever consequences that we embrace
waiting game is ours...with disgrace.
Oh dear war lords....!
destroy me entirely to eternity
destroying me half way through
please don't let my mother
for another maternity
I would like to use the word starts with f....
would that help to stop the heck?
we all have heart and souls
how come it's all being sold?
Liver, pancreas and the other organs
rip my life prematurely
am I underestimating
your proclaimed slogans
If I happened to live next to river bank
existance will never go that bad
greed and selfishness overhwelmed
ripped off my life whatelse so sad!!!!
Anandprasad.

Monday, September 19, 2011

Retreat

 

The way the mountains lying down
green nothing but.......everywhere
Wake up soon and wear your gown
Reach the summit I swear




You guys holding pine and cedar
Youth and strength altogether
Resistance never resists the weather
Typically..... as a human ladder





Where I am sitting
the sun ready to wrap
I assume it is around...
above twenty feet up



Falling down and changing color
To save the green and make it free
By the end of the day like a fortune teller
I witnessed this event through a grown up tree

Thursday, September 1, 2011

Mirage

So many questions...gone unanswered
solicited into my sensorium
digging like a worm enjoy the poop
disgusting...life is not an emporium


Mistakes I have made in my past
misinterpretation of marriage
misinformed caused me at last
miserably...like a mirage


Living with fear in every second
legalities doesn't imply so far
loving and caring that I pretend
loosely based on DO Re Mi Fa


Executing....life without true love
Encoded with...such a fake
Elude...as soon as possible
Save your soul for God's sake!!

Friday, August 12, 2011

Burning coil


Staring at a burning coil
that chases off the mosquitoe
bitten by them and scratched my back
I don't want to be a Quasimodo


Oh........... dear little insect
taste....and suck all of my blood
overall the reminder ..... in fact
you are going to die with an overload


God creates us all equal
Don't ever try to impose a sequel
You are one among the creatures
Determined to defeat me.... is awful


All you can do to my skin look bad
Quite a strategy....oh it's so sad!!!
Since my childhood I've been through this all
It's just you...I'm not mad!!!! 










Friday, August 5, 2011

புதையல்!

தோண்டிக்கொண்டிருக்கும் போது
சொன்னார்கள்......
தோன்றியவிதமாகவெல்லாம்.
சிலபேர் சொன்னார்கள் தங்க நாணயங்களென்று!
சிலபேர் சொன்னார்கள் முத்து நவரத்தினமென்று.
கொஞ்சப்பேர் சொன்னார்கள் கோமேதகமென்று
மிஞ்சியிருந்தோரும் மெத்தச்சரியென்றார்!
பார்வையாளர்கள் தானே?
பதிலளிக்கத்தேவையில்லை.
வேர்வையில் முக்குளித்து விரைவாகத்தோண்டினார்கள்
'' ணங் '' என்று சத்தமொன்று......!?!?
தோண்டுபவர்களுக்குள் தோன்றியது கைகலப்பு!
மாண்டவர்கள் ஓரிருவர்,
மற்றவர்கள் தோண்டினார்கள்.
பார்த்துக்கொண்டு நின்றவரில் பாதிப்பேர் சொன்னார்கள்
விடுதலை....விடுதலை......
விடுதலைதான் கிடைக்குமென்று.

மூலைக்குள் நின்ற சிலர் முன்னுக்கு வந்தார்கள்
பார்க்கவல்ல...... தோண்ட.
மீண்டும் உற்சாகம்! மீண்டுமொரு நம்பிக்கை.
'' ணங் '' என்ற சத்தம் இப்போது
பலதடவைகள் கேட்க..........
தோண்டுபவர்களுக்குள் மீண்டும்
தோன்றியது.....கைகலப்பு.
மாண்டவர்கள் ஏராளம்!
பார்வையாளர்கள் உட்பட.
தோண்டுவதை மறந்து
சிலகாலம் பொருதினார்கள்
தோண்டிய குழியெல்லாம்
சதையும், இரத்தமுமாய்..............
வழிப்போக்கர் சிலபேர் வகைசொல்ல வந்தார்கள்.
அமைதி நிலைநாட்டுவதாய்
அப்பம் பிரித்தார்கள்.
இதைச்சிலபேர் மறுத்தார்கள்.
தோன்றியது கைகலப்பு.......
வழிப்போக்கரோடு சேர்ந்து
நின்றவரும் போய்த்தொலைந்தார்!
எஞ்சியவர் தோண்டினார்கள்............
செத்தொழிந்துபோக...மிச்சம்
பார்வையாளர்கள் சொற்பம்.
தப்பிப்பிழைத்தவர்கள்
தோண்டியதை அள்ளவென
தொலைதூரம் போனார்கள்
'' ணங் '' என்ற சத்தம்.....இப்போ
கேட்பதேயில்லை.
தோண்டியவர்கள் வேறு வழியேயில்லாது
தோண்டிக்கொண்டேயிருந்தார்கள்.
புதையலுக்காகவல்ல.................
ஒருலட்சம் பிணங்களை
போட்டுப்புதைப்பதற்காய்.................!

{இற்றைக்கு சுமார் இருபது வருடங்களின்முன்பு.....1991.....
கற்பித்த வரிகள்.... நணவாகிக்கண்முன்பு..........
நன்றி; '' தாயகம்'' }

Thursday, August 4, 2011

A friendly reminder.

Just for a change please read my mind
compromises I have made.... to be your friend
our views and thoughts may conflict
besides...the contradictions never inflict

Ever since I have learnt to write
I always wanted to be a poet
material I've chosen for that
to live with peace and to be quiet



Through a constant bumpy ride
I always want my knowledge be stretched
You are somehow being so rigid
utterly denied and unfairly dispatched

Oh my friend....or so called
I cannot think the way you want
you may keep me or even delete
congressionally I believe where I stand

You scratch my back and I do it to yours
if we adapt.... this world will be ours
making love and loose your sperm
with this concept.... victory confirm!!!
Anandprasad



Friday, July 29, 2011

அந்திமம்!

மன ஆழத்திற்குள்
போய் விழுந்தான்
மாலைச்சூரியன்
இரத்த அலைகளை
எறிந்தபடி........

அளக்க முடியாத
தொலைவு!
தொட்டுவிட முடியாத
தூரம்!

வசப்படாத வாழ்க்கை!
மீண்டும்
சுயத்திற்குள் விழுந்து
குருதிப்புனலில்
குளிக்கிறது.

இயலாமை
மனதிற்குள் குறுகிவிடுகிறது
மாயை
விஸ்வரூபமெடுக்கிறது!
ஊழ்
சுகமாக இருக்கிறது
ஆயினும்
எங்கோ ஒரு
அவநம்பிக்கையின் குரல்

இருப்பை முனகுகிறது!!!''

இவையாவும்......குரூரமெனில்!

 

திருகிப் பறித்து முகர்ந்து கசக்கி
எறிந்த சிறுபூக்கள்.
தாவர வாசனை தெரிந்துகொள்ள
நுள்ளிக்கிழித்த இலைகேநுனிகள்.
உறிஞ்சிய குற்றத்திற்காய்
இருபெருவிரல் நகநடுவே
நசுங்கி வெடித்த மூட்டைப்பூச்சிகள்.
குறுக்கேபோன குற்றத்திற்காய்
குடல்தெறிக்க உதைவாங்கிய
பூனைக்குட்டிகள்
நள்ளிரவுக் குலைப்பிற்காய்
கல்லடி வாங்கிய குட்டிநாய்கள்.
உடம்பில் கடிவீங்கிய தருணம்
அடிவாங்கி மரித்த நுளம்புகள்.
பின்நவீனத்துவப்பேதமை அற
ரசாயணக்கலவைகளின்
சீறலில் செத்துப்போன
சின்னஞ்சிறு ஜந்துகள்.
அயலார் பயிர் மேய்கைக்காய்
பனைமட்டைக்காவடியெடுத்த
ஆட்டுக்குட்டிகள்.





கவண்பயிற்சிக்கல்லடியில்
இறகு கிழிந்த கிழிக்குஞ்சுகள்.
பாஷாண பாசத்தில்
பலிபோன எலிக்குஞ்சுகள்.
சாதிப்பிளவுகளின் சமரில் எரியுண்ட
ஆதிதிராவிடத்து அக்கினிக்குஞ்சுகள்.
அயல் வளவிற் கிளைத்த
பூவரசின்...............கதியால்!!!
அரிவாள் சமர் விளைத்த
அமானுஷ்யக்குட்டிகள்.
வளவும் தொலைந்து சொந்த
வளமும் தொலைந்து இனி
அழவும் வலிவின்றி அவலம் தலைசுமந்து
பகடைகளாய்பலிபோன அகதிக்குஞ்சுகள்.
''பதம் பட்டாலே எறும்பும்
வதம்...!!! என்ற போதம்வர
மயிற்பீலி தரை நீவ
தடம் பார்த்து நடப்போரைத்தவிர்த்து.......''
ஏனயவை யாவும்.......குரூரமே!!!


Oh Lord, You will be pardoned!

 






In a strange land
this planet of the earth
I was born....
Is it really worth?

If prediction is possible!!
at the time of my birth....
my soul wouldn't be disposable
throughout my life path

By birth I happened to be a Hindu
Beliefs and rituals never.... undo

The cycles of birth
determined by Brahma
Silence of death
blamed by their Karma

Protection of the creation....!!!
portfolio....belongs to Krishna!!!
prohibited....parameters
Failed....!?!Why so rush now?

Balance the weight
that the earth could stabilize
Belongs to Shiva...
Does he mobilize?

Yes.... indeed...
besides the natural disasters....
why youth
destroyed so faster?

Every corner in this globe now...
Irresistible fear embraces....how?
Those demonized by injustice
believed in God's malpractice!!!
                                             








கிளி ஜோஸ்யம்.



சொல்லுக்குள் பொருளாகி......
பொருளாகி அறிவிழந்து
அல்லுக்குள்...... பகலுக்குள்
அலமர்ந்து.....அந்தியின்.....கண்
மெல்லத்திறக்க மெலிதாகும் சிந்தனைகள்.

சீட்டு (1)

தொல்பொருளாகும் பட்ட
துன்பங்கள்!
துயரங்கள்....தோள்பட்டையேறும்!!!
தொடர்ந்தொருகால் தோல்விகளோ
நாள்பட்ட புண்களாய் நாறும்.

சீட்டு (2)

இருப்பென்னும்
வாழ்வின் கூறு வலிகொள்ளும்!
அதனுள்ளில்
காழ்ப்பும், வசவும்
கனபரிமாணங்களுடன்
மீண்டும் முருங்கை மரமேறும்!
வேதாளம்
யாண்டும் எள்ளி நகையாடும்.

சீட்டு (3)

மீண்டுமொரு
பூஜ்ஜியத்திலிருந்து புதிதாக
முளை கிளம்பும்!!!
வரட்சியில்....பூ.........வேறுவழியின்றிப்பூக்கும்.
புரட்சியெனவோர் பெயரும் அரசோச்சும்!!!

சீட்டு (4)
         
இனியும் யாரேனும்
யுத்தமென முனகினால்......
தலைவெடித்து சுக்கு நூறாகும்!!!
இவ்வாறு
வேதாளமும், கிளியும்
இயம்பிற்று!!!

Tranquillity

Oh my friend
why are you sitting in dark?
Out there
so many...holding the spark!!

I learnt to love
therefore sorrows embark
at last my soul
freed ........from war shark!

This day....this evening
my vision....senses....for termination!!
I got stuck... stagnant...
ushered my thoughts for elimination
Am I really in need?
any of my images created?
my brain cells greed....!!!
shouldn't those deserve be cremated?

My life sprout
begins from zero
the life span
makes me believe that I am a hero!!!

Timelessly whenever....
wherever I loose my self esteem
there is a friend
arose ultimately with a light beam

I may not be able....
distinguish the torrential rain
the chill and the will
runs eternally through my vein

Day after day
my ride emotionally charged
news I hear from my home land
unimaginably.... enlarged!

Wherever I go
a little squirrel with three lines
hops around me...
I enjoyed
Is this my lifeline?

Life evolved with lies
most of the time
I confuse
Eyes of my inner sight
always
provoke me to refuse

I smell roses
lilies and lilac
jasmine chrysanthemum
best of my luck

Smell of war
I never loose my grit
Oh my friend
All I believe.... you bet!!!
Ananda Prasad





Vision of love

கதிபேதம். (கருப்பு ஜீலை1983 நினைவாக....)















ஒருநாளின்மீது ஒருசிலநாட்கள் போட்டுச்சில

பலநாட்கள் கழித்திருந்தோம்! --- அட

ஓர்நாள்நடை நிமிரும்!!! ஓய்வோம்.....எனதான

ஓர்மத்திற் களித்திருந்தோம்.

வருநாள் வளமாகும்......வரலாற்றின் கணிதத்தில்

வகுநாளாய் எண்ணி வாழ்ந்தோம். --- அதன்

வெகுமானம் இஃதென்ற பெருமாயைக்குள் ஆழ்ந்து

அவமானத்தில் அமிழ்ந்தோம்.

வருமானம் தனைநாடி..... சிலமானம் போனாலும்

வளமேதான்....என்றிருந்தோம். ----- இட

வலமாக மேற்கிலும், வடக்கிலும், கிழக்கிலும்

பலமாக வேரூன்றினோம்.

கருவான நாள்முதல் கனவான வாழ்வினில்

களிபேருவகை கொண்டோம். ----- ஒரு

கடிவாளமில்லாமல் அடையாளமில்லா....அ

கதியான வாழ்வு கண்டோம்!!!