Thursday, July 17, 2014

இறுதிமரியாதை

 

இந்த குழந்தை மரத்தை

கொத்தித்தின்றுகொண்டிருக்கும்

கோழிகளை

பிழுக்கையீன்று தள்ளும்

ஆட்டுக்குட்டிகளை

வாய்பேசாமல்

அசைபோட்டுக்கொண்டிருக்கும்

கன்றுகளை

இவைகளோடு

கடத்திச்செல்லப்பட்ட

மனிதராசிகளுட்பட

வெட்டரிவாளுக்கும்

ஒருதுளி ரத்தத்திற்கு

சிலதுளி கண்ணீர்

சிந்த உரிமையுண்டு

ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment