Thursday, December 25, 2014

21 கிராம்

 


ஏழில் ஒன்றாகிய
ஏதோவொரு
நீர்ப்பரப்பில்
எக்காளமிட்டன
துவிச்சக்கரங்களாய்
அமாவாசையையும்
பொருட்படுத்தாது
தூரமறியாத
நட்சத்திரம் ஒன்றின்
குப்பி விளக்கு
ஆழமறியாது
நீந்திக்கொண்டிருந்த என்னை
அடையாளம் காட்டியது
காலம் தவறிப்போன
கருஞ்சுவர்களில் எழுதியவை
மின்மினிகளாகி
மேலும் ஒளிக்கு
மெருகூட்டின
ஒளித்தோடிக்கொண்டிருக்கும்
துணை இரவிகளுக்கும்
அமிழ்ந்து போகாதேயென்று
எத்தி எள்ளித்தள்ளும்
''டொல்பிஃன்'' களுக்கும்
நடுவே
தழும்பித்தியங்கும்
நானும்.....
இந்த மூன்று ப்ரம்மாண்டங்கள்
கரையேறியதில்
எஞ்சியது
வெறும் கையளவே.
ஆனந்தபிரசாத்

 
  • Thirugnanasampanthan Lalithakopan கருஞ்சுவர்களில் எழுதியவை
    மின்மினிகளாகி
    மேலும் ஒளிக்கு

    மெருகூட்டின....வெளிச்சம்
    10 hrs · Unlike · 1

  • Vanitha Solomon Devasigamony துவிச்சக்கரங்களாய்
    அமாவாசையையும்
    பொருட்படுத்தாது

    தூரமறியாத
    நட்சத்திரம் ஒன்றின்
    குப்பி விளக்கு
    ஆழமறியாது
    நீந்திக்கொண்டிருந்த என்னை
    அடையாளம் காட்டியது......
    3 hrs · Unlike · 1

  • George Singarajah மேலும்

    ஒளிக்கு


    ஒளியூட்டின
    5 mins · Unlike · 1

Saturday, December 6, 2014

ரகசியம்

 


முகில் தோகைகளின்
இடுக்குகளினூடே
விகசித்த வெளிச்சம்
சுவறிப்போய் கிடந்தன
நெடுஞ்சாலையில்
இருளின் ரணங்களுக்கு
வெஞ்சாமரம் வீசிக்கொண்டு
கும்மிருட்டு
காலகாலமாக
பயாநுகத்தின் சின்னமாகவே
சித்தரிக்கப்பட்டிருந்தது
கண்கள்
ஓசைகளை மட்டுமே
பார்க்கப்பழகிக்கொண்டன
தார்கள் சொரிந்து கிடந்த
வாழைப்பாத்திகளினூடே
உன்னுடையதும்
என்னுடையதுமான
அதர பரிமாறல்கள்
முதலிரவை நிராகரித்தன
அத்துமீறல்தான்
உணர்ந்தேன்
எங்கிருந்தோ சொரிந்த
எரிமழையில்
நாம் நிராதரவானோம்
மூடுபனி படுதாக்களின் பின்னால்
ரகசிய வெப்பத்தின் நிரவல்கள்
எனக்கும் உனக்குமானவை
வரட்டும் சூரியன்
ஆனந்த் பிரசாத்
 

கழிவுகள்

 

மண்ணில் முகிழ்தவை
மண்ணுக்கே
ஆதாரமாய் மீண்டும்
எருவிலிருந்து வாழ்வு
எழுகிறது
மாதாந்தர சீட்டின்
கழிவுகளிலிருந்து
இலாபம் எகிறுவதைப்போல
எதை உண்ணலாம்
எதை உட்கொள்ளலாகாதென்பது
மருத்துவரின் பரிந்துரை
மேலதிகமானால்
பதின்மூன்றாவது மாடியிலிருந்து
நானும் தள்ளப்படுவேன்
பூமிக்கு
இந்த கோளுக்குள்ளும்
வயிறுண்டு
செரிமானமுண்டு
வாழ்வுக்கும் வாழவைப்பதற்குமான
பரிவர்த்தனைகள் உண்டு
இதன்மீதுதான்
இன்னமும் நாங்கள்
உலவிக்கொண்டும்....
ஆனந்த் ப்ரசாத்
 
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "..
    இந்த கோளுக்குள்ளும்
    வயிறுண்டு

    செரிமானமுண்டு
    வாழ்வுக்கும் வாழவைப்பதற்குமான
    பரிவர்த்தனைகள் உண்டு.." அருமை
  • Kiruba Pillai இந்த கோளுக்குள்ளும்
    வயிறுண்டு
    செரிமானமுண்டு//
  • Thirugnanasampanthan Lalithakopan வாழ்வுக்கும் வாழவைப்பதற்குமான
    பரிவர்த்தனைகள் உண்டு
    இதன்மீதுதான்....உண்மை
  • K Shiva Kumar *உண்மையும் அருமையும்
    "மண்ணில் முகிழ்தவை
    மண்ணுக்கே

    ஆதாரமாய் மீண்டும்
    எருவிலிருந்து வாழ்வு
    எழுகிறது" இந்த கோளுக்குள்ளும்
    வயிறுண்டு
    செரிமானமுண்டு
    வாழ்வுக்கும் வாழவைப்பதற்குமான
    பரிவர்த்தனைகள் உண்டு..
  • Francesca Kanapathy "...மண்ணில் முகிழ்தவை
    மண்ணுக்கே
    ஆதாரமாய் மீண்டும்

    எருவிலிருந்து வாழ்வு….இந்த கோளுக்குள்ளும்
    வயிறுண்டு
    செரிமானமுண்டு
    வாழ்வுக்கும் வாழவைப்பதற்குமான
    பரிவர்த்தனைகள் உண்டு
    இதன்மீதுதான்
    இன்னமும் நாங்கள்
    உலவிக்கொண்டும்…Amazing!!
    Symbiosis is a relationship between two or more species for the purpose of co-exitence. Right at this moment, we are experiencing that...our body cells and the different microorganisms living inside us are living in harmony, in a perfect equilibrium. If bacteria can do it, why can't we humans do the same? This poetry beautifully makes us reflect on our inability to co-exist with Mother Earth, the hosting "organism"….and the existence of human parasites causing this mess!! Very nice Uncle…Thank you for sharing this poetry!!
  • K Shiva Kumar Good info thanks Francesca Kanapathy