Sunday, September 22, 2013

காதல் பள்ளி....எட்டாம்வகுப்பு.

 

 




ஒரு நூலிழையில்

தவறவிட்டேன் உன்னை

பேசாமலே போய்விட்டாய்.....

இறந்தேன் இலேசாக...அன்று.

மீண்டும் முருங்கையில் ஏறினேன்...

வார்த்தைப்பிழையால்....மீளவும்

மயிரிழையில் இழந்தேன்!

காத்திருப்பின் சுகமும்

கனவுகளின் பாத்திரத்தில்

ஆத்மவிசாரத்தின் நறுனீர் அமைவில்...

இன்னொருமுறை

'ஆம்' என்றாய்!

இதமாக இறந்தேன்

காகம் பீச்சிய கதிரை மேசைகள்....

வியர்வை நாறும் வகுப்பறைகள்....

இன்றும் பவள மல்லிகைதான்!

நான் நிர்மாணித்த முதல் விமானம்

காகிதங்களாலானது

மெளனத்தை தவிர

வேறெதையும் நாம் பேசவில்லை!

வெடியும்...ஒசைகளும்...

பேரோசைகளும்.....அலறல்களும்.....

அற்ற ஒருநாளில்

வகுப்பறையில் நீ விட்டுச்சென்ற

(அல்லது வேண்டுமென்றே!)

இரசாயணவியற் கைநூல்

பக்கங்களுக்கிடையே

ஒரு மயிற்பீலியுடன் கிடைத்தது

கூடவே நான் நிர்மாணித்த

காகித விமானமும்......

அதன் பின்பு

எனது விமானம்

எங்கோ தரையிறங்கியது

ஒட்டுமொத்தமாய் இறந்தேன்!

ஆனந்தப்ரசாத்
 

  • VJ Yogesh “எனது விமானம்

    எங்கோ தரையிறங்கியது

    ஒட்டுமொத்தமாய் இறந்தேன்!”
  • Ravi Kathirgamu நான் நிர்மானித்த முதல்விமானம் காகிதங்களாலானது மௌனத்தை தவிர வேறெதையும் நாம் பேசவில்லை.!
  • Rajaji Rajagopalan இதமாக இறந்தேன்

    காகம் பீச்சிய கதிரை மேசைகள்....

    நான் நிர்மாணித்த முதல் விமானம்


    காகிதங்களாலானது

    எனது விமானம்

    எங்கோ தரையிறங்கியது

    ஒட்டுமொத்தமாய் இறந்தேன்!..//

    இவ்வரிகளை நான் அழகாக ரசித்தேன். அல்லது இவ்வழகான வரிகளை வரிவரியாக ரசித்தேன்.

    என் இளமைக்கால நினைவுகளை அசைபோடச் செய்தீர்கள், நன்றி, ஆனந்த்
  • Genga Stanley enko manam ninrathu.kavalai than.
  • Vanitha Solomon Devasigamony அழகான, உயிரோட்டமான கவிதை வரிகள்!
  • N.Rathna Vel அருமை.
  • Mary Beulah Brilliancy ஒரு நூலிழையில்

    தவறவிட்டேன் உன்னை

    பேசாமலே போய்விட்டாய்.....


    இறந்தேன் இலேசாக...அன்று....
  • Subramanian Ravikumar பசுமை நிறைந்த நினைவுகளின் கவிதை... இதுபோன்ற கவிதைகள் சோகம் சுமந்தாலும் ஒருவிதமான சுகம்தருவனவாகவே உள்ளன...ஓகாரம் இருந்தாலும் உகரமாகவே மனசுக்குள் இறங்குகின்ற... வாழ்த்துக்கள் ஆனந்த்..
  • Santhiya Thiraviam அழகான கவிதை வரிகள் . வாழ்த்துக்கள் ....
  • Naavuk Arasan "மெளனத்தை தவிர
    வேறெதையும் நாம் பேசவில்லை ! " அழகான நிரந்தரமாக வலி நிறைந்த வரிகள்! ( ஆத்மவிசாரத்தின் நறுனீர் அமைவில்..what is this meaning .???????) ) ( மீண்டும் முருங்கையில் ஏறினேன்...இந்த வரி இந்தக் கவிதையின் கவிதைமொழி வீரியத்தை குறைகுதே இலைங்களா?)
  • Naavuk Arasan நீங்க எப்பவுமே நான் போடும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில என்ன காரணம் ? " இசமார்வுக்கு பாம்பு கொத்தி அசமாரா கமிங்கா " காரணம் ? Anand Prasad
  • Thiru Thirukkumaran அதன் பின்பு
    எனது விமானம்
    எங்கோ தரையிறங்கியது
    ஒட்டுமொத்தமாய் இறந்தேன்!// அருமை
  • Sabes Sugunasabesan I wonder if only boys had these dreams. What about girls' dreams. I have not seen girls' love desires in poems.
  • Kuppilan Shanmugan எல்லாருடையவும் இள்மைக்கால சோக நினைவுகள்............சுகமானவையா? அருமை.
  • Sabes Sugunasabesan When events become memories, then recalling the memories perhaps comforting rather than the actual events.
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ஞாபகங்களை கிளறும் வரிகள். "..காகம் பீச்சிய கதிரை மேசைகள்....
    வியர்வை நாறும் வகுப்பறைகள்....
    இன்றும் பவள மல்லிகைதான்!.."
  • Anand Prasad 1 )ஆத்மவிசாரத்தின் நறுனீர் அமைவில்..what is this meaning .???????)
    (2) ( மீண்டும் முருங்கையில் ஏறினேன்...இந்த வரி இந்தக் கவிதையின் கவிதைமொழி வீரியத்தை குறைகுதே இலைங்களா?)
    எனது வார்த்தைப்பிழை.....''உங்கட கையெழுத்து.......... கொட்டிப்போன
    இங்கிப்புட்டியி
    ல் நண்டு நடந்து வந்து எழுதினாப்போல இருக்கு''
    இதற்காக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தவள்.....
    அன்று மாலை எனது முன்வீட்டுப் பலாமரத்துக் கிளையொன்றில்
    அமர்ந்து அழுதேன்....அழுதேன்....அப்படியழுதேன்.....
    கண்ணீர் வாய்வழியே புகுந்து கரித்தது.....நறுநீர் தானென்றும்...
    இதுதான் ஆத்ம விசாரமென்றும்......இத்தனை வயதுக்கப்புறம்...
    இப்போது தான் புரிகிறது. குழந்தைத்தனமான காதல் ...ஈடுபாடு....
    பலாமரத்திற்கும்....முருங்கைக்கும்...உள்ள பலப்பரீட்சை
    நீங்கள் அறியாததல்ல!!!
    தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் (அல்லது ஆனந்தபிரசாத்) மீண்டும் முருங்கையிலேறினான்...
    இரண்டாம் தடவையும் என்னை அங்கீகரித்தாள்....எனது
    அசட்டுத்தனங்களை அலட்சியப்படுத்திவிட்டு......
    கள்ளமில்லாத அன்பை அடைவது.......மிக
    கடினமான task நண்பரே.
    வெறுமனே பிறப்புறுப்புகளின் உரசல்களால்
    அன்பின் ஆழம் அர்த்தப்படுமாகில்....
    ஒன்று....''புத்தானா'' விடம் யாசிக்கலாம்.....அல்லது
    புத்தனாகி யோசிக்கலாம்....
    இந்தப் பதிலால்....திருப்தியடைந்த நீங்கள்
    மீண்டும் கீழே தொங்கும் உடலை எடுத்துக்கொண்டு.....
    மீண்டும் முருங்கை மரமேறுவதை.....
    என் மனக்கண்களால் காணமுடிகிறது....Naavuk Arasan
  • Pena Manoharan சோகங்களே சுகமான கவிதைகளைப் பிரசவிக்கின்றன.அருமை கவிஞரே.
  • Valarmathy Siva மீண்டும் பள்ளிக்கு எங்களை அழைத்துச் சென்று விட்டீர்கள்,காதல் பள்ளியின் முதல் அனுபவங்களும் அவஸ்தைகளும் அழியாத பாடங்களாய் அனைவருக்கும் மறக்க முடியாத சுகானுபவங்களே ,அருமை
  • Jeyarany Norbert "..காகம் பீச்சிய கதிரை மேசைகள்....
    வியர்வை நாறும் வகுப்பறைகள்....
    இன்றும் பவள மல்லிகைதான்!.. இளமைக்கால நினைவுகளை இன்பமாக நினைவூட்டி மகிழச்செய்து விட்டீர்கள்.
  • Naavuk Arasan நன்றி ,,ஆனால் உங்களின் பதில் கொமன்ட் புரிந்துகொள்ள முடியவில்லை ,,ஒருவேளை SO CALLED " ஆத்மவிசாரத்தின் நறுனீர் அமைவில்" அந்தளவு முதிர்ச்சி எனக்கு இல்லைப்போல தெரிகிறது
  • Naavuk Arasan எனக்கு தமிழ் எழுத தெரியாது ,உண்மை ஒத்துக்கொள்ளுறன், அனால் நீங்கள் இன்னும்" ஆத்மவிசாரத்தின் நறுனீர் அமைவில் " எண்டதுக்கு என்ன அர்த்தம் எண்டு என்னைப் போன்ற தற்குறி அரை குறைகளுக்கு விளங்குற மாதிரி சொல்லுங்க எண்டா நீங்க காளமேகப் புலவர் ரேஞ்சுக்கு கொமன்ட் போட்டு வெறுப்பு ஏத்துரீங்க்லே Anand Prasad
  • Anand Prasad உங்களுக்கு தமிழ் எழுத தெரியாதென்று
    எங்கேயாவது நான் சொன்னேனா...என் செல்வமே!
    காளமேகப் புலவரை எடுகோள் காட்டுமளவிற்கு
    வெவரமாகத்தான் உங்க ரேஞ்சு....வெளக்கமாயிருக்கிறது.
    நல்ல வாசிப்பு இருக்கிறது உங்களிடம்.....

    இந்த சின்னஞ்சிறிய வரிகளை புரிந்துகொள்ள முடியவில்லை
    என்று பொழிப்புரை கேட்கிறீர்களே.......
    சும்மா விடுமே.....எப்போதாவது புரியுமNaavuk Arasan.
  • குழந்தைநிலா ஹேமா ஆத்மாவையே ஒருகணம் அமிழ்த்தியெடுக்கிறது.மூச்சு விடுதலும் சிலசமயம் எடுத்தலும் சுகம்.உங்கள் கவிதையைப்போல !
  • Naavuk Arasan hahahahahahaa time will reveal its self...
  • Anand Prasad Dear Naavuk Arasan, well said bro!! That's the duty of the time to do!!!

    The revelation of the magnitude of my phrase....
    Time will reveal and embrace!!
  •