Thursday, July 17, 2014

கலங்கரைவிளக்கம்

 

 


நள்ளிரவில் ஆழ

நடுக்கடலில் வெண்நுரையை

மெள்ள வகிடெடுத்து

விரைகிறது எனதுகலம்

சுக்கான் பிடித்து

சுழற்றுகிற இறுமாப்பில்

எக்காளமிட்டு

எகிறியது என்மனது

யாரோ கிரேக்கத்து

வியாபாரியின் கப்பல்

ஏராய்க்கடலின்

எழுபரப்பும் உழுதுவர

எனைநம்பி

முப்பத்து ஏழுஉயிர்கள் துயில

முழுநிலவும் வானத்தே

முளைக்கும் நட்சத்ரங்களுமாய்

நழுவுகிற நீர்ப்பரப்பில்

நானொருவன் குறித்த

திசையில் பயணிக்கும்

திறனாய்ந்த சாரதியாய்

இசையின் சுரங்களைப்போல

இழைந்து பேரலைகளுடன்

சமரசங்கள் செய்த

சாமர்தியங்கள் எல்லாம்

அமர வாசகங்கள்

ஆழ்கடலை வென்றேன்

விழத்தெரியா நின்றேன்

விழுந்தேன் எனதுமண்ணில்

உழத்தெரி யாத உடல்

ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment