Sunday, July 27, 2014

உதிரத்தின் உள்ளும்.....

 



விடுதலை நெருப்பை தங்கள்

விழிகளில் மட்டும் அல்ல

உடலினுள் ஊடு பாவும்

உதிரத்தின் உள்ளும்.... வெல்லும்

திடமுடன் போரைத் தாங்கும்

திறனுடன் நின்ற பேரை

படுகொலை செய்த பாவி

பரிசுத்தன் ஆன தென்னே?

நூற்றிலே பத்து வீதம்

நுவலரும் துயரைத் தாங்கி

ஆற்றலும் அறிவும்.......தேர்ந்த

ஆளுமை கொண்டு போரால்

மாற்றலாம் நிலைமை என்றார்

மற்றையோர் இவர் நெருப்புக்

காற்றிலே கூதல் காயக்

கரந்தனர் வேற்று நாட்டில்....!

இந்த அவலத்தில் அடியேனும் அடக்கம்......

ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment