Wednesday, November 23, 2011

நிதர்சனம்.













தத்துவங்களால்
தத்தெடுக்கப்பட்டவர்களுக்கும்
தத்துவங்களிலிருந்து
தப்பித்து
வந்தவர்களுக்கும்.... இடையே
தர்மயுத்தம் நடக்கிறது!
முரண்பாடுகள்;
சரிவுகள்;
சலிப்புகள்;
சிலர் தலைமறைவு....
பலர் தலைகள் மறைவு.

நண்பனே!
காற்று எனது கவிதைகளைச்
சுமந்துகொண்டு
கைவீசி நடக்கும்!

சிருஷ'டிகளைச்
சீவியத்தில் நேசித்தவன்
மரணத்தின் பின்
சிருஷ'டிக்கப்படுகிறான்!
தோள்களில்
சுமக்கப்படும்போதுதான்
உயிர்த்தெழுகிறான்.
சிறகுகளை
உதிர்த்துவிட்ட பிறகுதான்
பறக்கவே ஆரம்பிக்கின்றான்!

ஆம்!
இந்த ஆயுதவேதங்களால்
வரையறுக்கப்பட்ட
துப்பாக்கித் தீர்வுகள்
துர்ப்பாக்கியமானது!

இருப்பினும்
இருப்போம், இருப்போம்!!
காற்றிலிருக்கும்
எனது சொற்களை
காலம் மீட்டெடுக்கும்!!!

-ஆனந்த் பிரசாத்-
தேடல் பெப்ரவரி 1990

No comments:

Post a Comment