Friday, July 29, 2011

அந்திமம்!

மன ஆழத்திற்குள்
போய் விழுந்தான்
மாலைச்சூரியன்
இரத்த அலைகளை
எறிந்தபடி........

அளக்க முடியாத
தொலைவு!
தொட்டுவிட முடியாத
தூரம்!

வசப்படாத வாழ்க்கை!
மீண்டும்
சுயத்திற்குள் விழுந்து
குருதிப்புனலில்
குளிக்கிறது.

இயலாமை
மனதிற்குள் குறுகிவிடுகிறது
மாயை
விஸ்வரூபமெடுக்கிறது!
ஊழ்
சுகமாக இருக்கிறது
ஆயினும்
எங்கோ ஒரு
அவநம்பிக்கையின் குரல்

இருப்பை முனகுகிறது!!!''

No comments:

Post a Comment