Tuesday, November 18, 2014

சூரியனின் காதல் தோல்வி

 

வழமையே போல்
வெளிறிப்போன வானம்
கிழக்கின் விளிம்பில்
மூழ்கிப்போன கடலிலிருந்து
மூச்செடுக்க
பூங்கொத்துகளின் இடுக்குகளினூடே
பொன்னுருக்கி தெளித்தது
எல்லாமும் சிறுமைப்பட்டு
சுருங்கியதாய் கருதப்படும்
காலகாலமான இரவுகள்
தற்காலிகமான தீர்வுகளில் அமுங்கின
இருள் நன்கறியும்
பகலின் வேஷங்களை
காலையும் மாலையும்
கடக்கும் நிறப்பிரிகைகளை
மனிதர்கள் விலங்குகள்
விலங்குகள் மனிதர்கள்
மரணங்கள் பிறப்புகள்
பிறப்புகள் மரணங்கள்
இருப்புகள் இறப்புகள்
இருப்பினுள் இறப்புகள்
வெளிச்சத்திற்கும் வெறுத்துப்போய்
சேவல்கள் இப்போது
அதிர்ந்து கூவுவதில்லை
தாமரைகளோ
அதிகமாக கண்டுகொள்வதில்லை
ஆனந்தபிரசாத்
 
  • George Singarajah நன்றி கவிஞர்

    உங்கள் இந்த இனிய கவிதைக்கு நன்றி
  • Jeyakumar Antoni இயற்கையின் வர்ணக்கலவையை வஞ்சனையின்றி அள்ளித் தெளித்திருக்கும் படம், கவிதைக்கு முற்பாட்டுப் பாடுகிறது !! பொன்னுருக்கித் தெளித்தல், கவியின் அழகியல் உணர்வின் கொடுமுடி வாசகம் !!!
  • Pena Manoharan 'சேவல்கள் அதிர்ந்து கூவுவதில்லை / தாமரைகளோ அதிகமாகக் கண்டு கொள்வதில்லை’.அருமை.வாழ்த்துகளும் நன்றியும்.
  • Ravi Kathirgamu சேவல் அதிர்ந்து கூவுவதும் இல்லை தாமரை விரிவதும் இல்லை காலம் மாறிப்போச்சு அருமை.
  • Thiru Thirukkumaran இருள் நன்கறியும் பகலின் வேஷங்களை
    எல்லாமும் சிறுமைப்பட்டும்
    சுருங்கியதாய்க் கருதப்படும்

    காலாகாலமான இரவுகள்//
  • Vanitha Solomon Devasigamony பூங்கொத்துகளின் இடுக்குகளினூடே
    பொன்னுருக்கி தெளித்தது
    எல்லாமும் சிறுமைப்பட்டு

    சுருங்கியதாய் கருதப்படும்
    காலகாலமான இரவுகள்
    தற்காலிகமான தீர்வுகளில் அமுங்கின.......சூரியனின் காதல் தோல்வி அருமை!
    ..
  • Rajaji Rajagopalan இருள் நன்கறியும்
    பகலின் வேஷங்களை..//


    அதனால் ஆனந்த ப்ரசாத்தின்

    சேவல்கள் இப்போது
    அதிர்ந்து கூவுவதில்லை..//

    இதை -

    தாமரைகளோ
    அதிகமாக கண்டுகொள்வதில்லை...//

    சூரியனும் காதலில் தோல்வியடைவதுண்டு!
  • RRavi Ravi · Friends with VJ Yogesh and 200 others
    நன்று
  • VJ Yogesh //இருள் நன்கறியும் பகலின் வேஷங்களை காலையும் மாலையும் கடக்கும் நிறப்பிரிகைகளை//
  • Yayini Lingam இருள் நன்கறியும்

    பகலின் வேஷங்களை


    காலையும் மாலையும்

    கடக்கும் நிறப்பிரிகைகளை

    மனிதர்கள் விலங்குகள்

    விலங்குகள் மனிதர்கள்

    மரணங்கள் பிறப்புகள்

    பிறப்புகள் மரணங்கள்

    இருப்புகள் இறப்புகள்

    இருப்பினுள் இறப்புகள்

    வெளிச்சத்திற்கும் வெறுத்துப்போய்

    சேவல்கள் இப்போது

    அதிர்ந்து கூவுவதில்லை

    தாமரைகளோ

    அதிகமாக கண்டுகொள்வதில்லை.........என்னைக் கவர்ந்த வரிகள்..கால மாற்றத்திற்கு ஏற்ப மனிதன் தொடக்கம் மரம்,செடி,கொடி ஏன் ஐந்தறிவு ஜீவன்களும் தன் இயல்பான சக்தியை விட்டு மாறிவிடுகிறது வார்த்தைகளால் வடித்து இருக்கிறீங்கள்.பகிர்வுக்கு நன்றிகள்.
  • Sulaiha Begam எல்லாமும் சிறுமை பட்டுச் சுருங்கித்தான் கிடக்கிறது மனிதம் போல....
  • Thirugnanasampanthan Lalithakopan எல்லாமும் சிறுமைப்பட்டு
    சுருங்கியதாய் கருதப்படும்
    காலகாலமான இரவுகள்

    தற்காலிகமான தீர்வுகளில் அமுங்கின
  • Kiruba Pillai இருள் நன்கறியும்
    பகலின் வேஷங்களை// wow kavignare ஒரு வரியில் உலகின் சாராம்சத்தை கொண்டு வந்ததை வியக்கிறேன்...இருள் என்பது யாதெனில் வெளிச்சத்தை மறைத்தல் என்றும் பொருள் கொண்ட கவிதை ஒன்றையும் பார்த்திருக்கிறேன்.புரிந்தும் புரியாதவை எப்பொழுதும் புதிர் தான் கவிஞரே ..
  • Ks Sivakumaran Nantri.Ungal kabithaiyai padikka mudinthamaik kaaka.Vaalthukkal.

No comments:

Post a Comment