Tuesday, November 18, 2014

புதையுண்டு போய்த்தொலை

 

மண்ணுக்குள் புதைந்து
மனித எருவானார்கள்
புண்ணுக்குள் முகிழ்த்த
புழுவானார்....வாழ்ந்த
காலங்களில் உங்கள்
கலயங்களில் தேனீர்
சாலச் சிறக்க
சமன்பாடு செய்தவர்கள்
முகட்டில் நீர் இருந்து
முதுவேனில் இளவேனில்
பகட்டில் பல்லிளிக்க
பயன்பாடு பட்டவர்கள்...
உங்கள் கழிப்பறைகள்
உயர்ந்தவைதான் ....பண்பாட்டின்
பங்கம் விளையாத
பக்குவம்தான்....ஆனாலும்
உயரத்தில் உம்மை
ஏற்றிவிட்ட உடம்புகளை
துயரத்தில் தள்ளிவிட
துணிந்தீர்களே.....நீங்கள்
மனிதர்கள் தானா அன்றேல்
மற்றோர் இழிந்த
புனிதப் பிறப்புகளா
புதையுண்டு போய்த்தொலை. 
 

No comments:

Post a Comment