Friday, November 21, 2014

'பெண்டூலம்'

 

வழமையே போல்
வினாடிகளை விரட்டிக்கொண்டு
அற்புதங்கள் நிகழப்போவதை
அனுமானிக்க இயலாதுபோன
அந்தராத்மா
வெயிலின் சூட்டினுள்
குளிரின் கூட்டினுள்ளேயும்
காத்திரமாக திரண்டஅணுக்கள்
வெறும் கண்ணாடி குழாயினுள்
அலையலையாய்....
உருண்டு திரண்டு
ஒன்றல்லாது
பூனையீன்றதுபோல
இறந்த மாமிசங்கள் போக
எஞ்சியவைகளை வைத்துக்கொண்டு
உழலுங்கள்....வாழ்வுக்குள்
உய்யவிளையும்
உயிர்கள் ஏராளம்

 

No comments:

Post a Comment