Friday, October 25, 2013

மனக்கணக்கு

 


இடது புறமாக ஒருக்களித்து

படுத்துக்கொண்டிருக்கிறேன்...

இமைத்திரையில்

நாளதுவரையில் பட்டவைகள்

சலனித்தன....

மொத்தமாக வாழ்நாளில்

உத்தரவாதமில்லாது போன

நாட்களை கழித்து

எஞ்சியிருந்தவற்றை

எழுதிக் கணக்கிட்டு

ஐந்தொகையை பதிய முயல்கிறேன்

நீங்களும் நானும்

நானும் நீங்களும்

வரவு செலவுகளாய்

லாப நஷ்டங்களாய்

உடனிருந்து கணக்கோடு

உடன்படிக்கை செய்தீர்கள்....

மூன்றுகால் என்றாலும்

முயல்தான்...முயல்தான்.....

இலக்கங்களோடு வாழ்வை

நகர்த்துவதென் இலக்கல்ல.....

எனக்கென்று

வழங்கப்பட்ட நாட்கள்

ஒன்றிலிருந்து பூஜ்யம்வரை.....

உதிர்ந்துகொண்டிருக்கும்

இலைகளை

மரங்கள்

கணக்குவைத்துக்கொள்வதில்லைதான்!

இழந்த நாட்களை

எண்ணப்போய்.....இப்போது

நெடுஞ்சாண்கிடையாக

படுத்துக்கொண்டிருக்கிறேன்

நான் மரமல்ல......!

ஆனந்தபிரசாத்.
 

  • VJ Yogesh “உதிர்ந்துகொண்டிருக்கும்

    இலைகளை
    ...See More
  • Kiruba Pillai summa kavalai padaamal poi vaasiyungo pulavare .. ainthokaiyai . (joke )
  • Santhiya Thiraviam மொத்தமாக வாழ்நாளில்

    உத்தரவாதமில்லாது போன


    நாட்களை கழித்து

    எஞ்சியிருந்தவற்றை

    எழுதிக் கணக்கிட்டு

    ஐந்தொகையை பதிய முயல்கிறேன்
  • Ponniah Karunaharamoorthy எண்களால் அமையும் ஆளப்படும் லௌகீக உலகில் இயையமுடியாது தவித்து, அகவயவுலகில் மட்டிலும் ஜீவிதத்தைத் துய்க்க விரும்பும் ஒரு ஆத்மாவின் விசாரம். இதயத்தை நெருங்கி வருகிறது.
  • Vanitha Solomon Devasigamony மனக்கணக்கில் முழ்கிவிட்டேன்.......!
    ".எனக்கென்று வழங்கப்பட்ட நாட்கள்
    ஒன்றிலிருந்து பூஜ்யம்வரை."

    இழந்த நாட்களைஎண்ணப்போய்.....இப்போது
    நெடுஞ்சாண்கிடையாக........"
  • Thiru Thirukkumaran இலைகளை
    மரங்கள்
    கணக்குவைத்துக்கொள்வதில்லைதான்!

    இழந்த நாட்களை
    எண்ணப்போய்.....இப்போது
    நெடுஞ்சாண்கிடையாக
    படுத்துக்கொண்டிருக்கிறேன்
    நான் மரமல்ல......!//
  • Chithan Prasadh பிறப்பு முதல் இறப்பு வரை கணக்கிடும் உலகத்தில் தான் நாம் இருக்கிறோம்! மரங்களைப் போல நம்மால் இருக்க முடிவதில்லைதான்!
  • Rajaji Rajagopalan வாழ்வு உத்தரவாதமில்லாதது. மூன்று கால் என்றாலும் முயல் முயல்தான். இலக்கங்களோடு வாழ்வை நகர்த்துவதும் ஒரு இலக்கா? உதிர்ந்துகொண்டிருக்கும் இலைகளை மரங்கள் கணக்குவைத்துக் கொள்வதில்லை. இழந்த நாட்களை எண்ணும் மனக் கணக்கு உங்களுக்கு நன்றாய்த்தான் வந்திருக்கிறது.
  • Pena Manoharan ’எண்ணும் எழுத்தும்’ என்றும் எண்ணுவதும் எழுதுவதும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது வாழ்க்கை நமக்கு.மனதில் நிற்கும் ஐந்தொகை உங்கள் ‘மனக்கணக்கு’.
  •  

No comments:

Post a Comment