Wednesday, October 23, 2013

ஒரு பகலும்......பின்னிரவில்....ஒரு கவிஞன் மனதும்.

 


காதுக்குள் திரண்டு கிடந்த மெழுகும்...ஓர்

மாதுக்குள் விளைந்த மகவும் ------ பாதிப்பு

வலயத்தை தாண்டி வருகின்ற வலிகளோ

கலயத்தில் நுரைத்த கள் ----உலகத்து

மாயைகளில் அமிழாது மனது விடுதலையாய்

போயகலும் ஓர்நாட் பொழுது ----- சாயைகளோ

கனவுகளில் சஞ்சரிக்கும்! கனபரிமாணம் கடந்து

சினமெழுமோர் போதின் சிலிர்ப்பு ------ நணவில்

மறுநாள் புலரும்.... மழலையினின்றும் பிரிந்த

வெறுநாளாய் ஆகும் வெளி ------ மறுப்பில்

வலியாகி மீண்டுமொரு வயிற்றுக்குள் விளைகின்ற

நலியாத சுகத்தை நண்ணும் ----- மெலியாது

மீண்டும்..... ஒருநாள் முருங்கை மரமேறும்

காண்பதெலாம் ஏகும் கனவாய் ------ ஆண்டு

உருண்டு...உருண்டு உருக்குலைந்து ஓடும்.....

திரண்ட புஜத்தில் தளர்வு ----- மருண்டு

வாழ்வியலை சாடியே வைகின்ற வசவுகளின்

வீழ்படிவை கவிதை விழுங்கும் ------ ஆழ்மனது

வெயிலற....நிழலின் வெளிச்ச குளிர்ச்சியினுள்

துயில்கொள்ளும் மெல்ல துவண்டு.

ஆனந்தபிரசாத்.
 

  • குழந்தைநிலா ஹேமா ஒரு வாழ்வியலின் சரிதம்.துடித்துப் பிறந்து ஆடி அடங்கும் ஓர் நாளில்.எனக்கு விளங்கியமட்டிலும் கவிதை வாழ்வியல் சொல்கிறது !
  • Pena Manoharan கலயத்தில் நுரைத்த கள்,சினமெழுமோர் போதின் சிலிர்ப்பு,வெறுநாளாய் ஆகும் வெளி,காண்பதெலாம் ஏகும் கனவாய்,திரண்ட புஜத்தில் தளர்வு,துயில் கொள்ளும் மெல்லத் துவண்டு,ஆகிய வரிகள் வெண்பா ஈற்றடிபோல் நெற்றிப்பொட்டைத் தாக்குகிறது.
  • Thiru Thirukkumaran நனவில்
    மறுநாள் புலரும்.... மழலையினின்றும் பிரிந்த
    வெறுநாளாய் ஆகும் வெளி//
  • Thiru Thirukkumaran வாழ்வியலை சாடியே வைகின்ற வசவுகளின்
    வீழ்படிவை கவிதை விழுங்கும் //
  • Thiru Thirukkumaran ஆழ்மனது
    வெயிலற....நிழலின் வெளிச்ச குளிர்ச்சியினுள்
    துயில்கொள்ளும் மெல்ல துவண்டு.// what a poem!, feel of infinity , great Prashath
  • Rajaji Rajagopalan நூறு கவிதைகள் சொல்ல முயலும் நூறுவிதப் பொருள்களை ஒரு கவிதையில் அடக்கமுயன்று வெற்றி கண்டிருக்கிறீர்கள் ஆனந்த். முருங்கை மரம் ஏறிய கற்பனை வேதாளத்தைக் கவிதையில் சிறைப்பிடித்துக்கொண்டீர்கள். இன்னும் பலமுறை வாசித்தாலன்றோ உங்கள் கவிதை நிழலின் வெளிச்ச குளிர்ச்சியில் துயில்கொள்ள இயலும்.
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "காதுக்குள் திரண்டு கிடந்த மெழுகும்...ஓர்
    மாதுக்குள் விளைந்த மகவும் ------ பாதிப்பு
    வலயத்தை தாண்டி வருகின்ற .." அருமையான படைப்பு. மனதில் ரீங்காரமிடும் வரிகள். அருமை
  • Santhiya Thiraviam அருமயான ஓவியம் இணைத்த கவிதையும் அருமை நன்றி
  • VJ Yogesh “ ----- மருண்டு

    வாழ்வியலை சாடியே வைகின்ற வசவுகளின்
    ...See More
  • Ravi Kathirgamu ஆண்டு உருண்டு உருண்டு உருக்குலைந்து ஓடும்.... திரண்ட புயத்தில் தளர்வு....மருண்டு வாழ்வியலை சாடியே வைகின்ற வசவுகளின் வீழ்படிவை கவிதை < காலம்> விழுங்கும். ஜதார்தமான கவிதை.!!!
  • Bhasky Kana வாழ்வியல் உங்கள் வரிகளில் வசமாய் வசப்பட்டிருக்கிறது...! வாழ்த்துக்கள்
  • Vanitha Solomon Devasigamony ஒரு பகலும்......பின்னிரவில்....ஒரு கவிஞன் மனதும்.'
    கவிதை அருமை. பலமுறை படித்தேன் ஆழ்மனது வெயிலற...... .
    உலகத்து மாயைகளில் அமிழாது மனது விடுதலையாய் போயகலும் ஓர்நாட் பொழுது .....
    ...See More
  • Subramanian Ravikumar வாழ்வையும் கவிதையையும் சொற்களையும் மௌனங்களையும் கடந்து செல்லும் காலம்...
  • Ponniah Karunaharamoorthy காதுக்குள் திரண்டு கிடந்த மெழுகையும்...ஓர்

    மாதுக்குள் விளைந்த மகவையும் ஒப்புவமை செய்ததை ஒப்பமுடியவில்லை.
  • Anand Prasad இவையிரண்டும் வெளியேற எத்தனிக்கும்
    வலிகளை மட்டும்......உணர்ந்து பாருங்கள்
    நம் உடம்பிலிருந்து வெளியேறும் அனைத்தும்
    ...See More
  • Ponniah Karunaharamoorthy உயிரை வெளியேவிட்ட உடம்பு எப்படிங்க சுகத்தை அனுபவிக்கும்? லாஜிக் பயங்கரமா உதைக்குதே?
  • Anand Prasad விட்டுத்தான் பாருங்களேன்....அல்லது
    விட்டுப்போனால் எப்படியிருக்கும்......என்று
    விட்டு விடுதலையாவதை......அதன் யதார்த்தத்தை....
    ...See More
  • Anand Prasad தினமும் பகலில் வாழ்ந்து இரவில்
    இறந்து போய்க்கொண்டிருந்த ஒரு தேசத்திலிருந்து
    மறுபிறப்பெடுத்தவன் நான்......
    ...See More
  • Naavuk Arasan நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் புத்தகமாக வந்திருக்குதா ? அல்லது ஒருசேர என்க்கையும் " வெப் லிங்கில் " படிக்கமுடியுமா ?
  • Ponniah Karunaharamoorthy உயிருள்ள உடலுக்குத்தான் உணர்வு. இறந்த எவரும் உங்களுக்கு வந்து அதன் சுவையைச்சொல்லிவிட முடியாது. ஆரம்பமே பிழைக்கும்போது மீதி எப்படிக்கவிதைக்குள் வரும் ? அதுக்குள்ள பின் நவீனத்துவப்பூச்சாண்டிகள் வேறா?
  • Anand Prasad Ponniah Karunaharamoorthy, I apologize for responding you in English because I'm afraid that you did not understand the poetry that I have written in pure Tamil. And also it is not an article about birth and rebirth...it is a poetry, I guess. Unfortuna...See More
  • Ponniah Karunaharamoorthy Sorry........... Comrade , if my words have disturbed you.
  • Naavuk Arasan " abstract"...whether it is in poetry, in metaphysics or in post-modernism theory. ," ...... this is true words of wisdom..Anand Prasad .----ஒரு நல்ல கவிதையின் ஆழத்தையும் சொல்ல வரும் விடயத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்வது, ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவத்தைப் பொறுத்தது.. அது வேறுபாடும் ! எல்லாருக்கும் ஒரே மாதிரி விளங்கினால் அது கட்டுரை, அல்லது உரைநடை ( அப்படி எழுதி அறுத்துத்தான் இப்பலாம் கவிதை என்கிறார்கள்),,
  • Kuppilan Shanmugan கவிதைக்கு பொருத்தமான ஓவியம்....ஓவியம் யார் படைப்பு?
  • Anand Prasad Kuppilan Shanmuganதெரியாதையா.....வலைத்தளத்திலிருந்து பொறுக்கியது.
    நன்றி தங்கள் மேலான அங்கீகரிப்பிற்கு.
 

No comments:

Post a Comment