Friday, October 25, 2013

காகிதம்

 


    இன்னமும் ஒரு வெள்ளாப்புக்காக.....

இந்த நடுநிசியில்
எழுதுகிற தாள்களின்மேல்...

கண்ணீரின் திவலைகள்தான்

காய்ந்து கறையானது....

தாள்களை அழுக்காக்குவது

நான்தான்.

காகிதங்கள் ஒருபோதும்

என்னைக் கடிந்ததில்லை

ஒன்பது ரசங்களை

கொட்டித்தீர்த்தாலும்

அடிப்பெட்டிக்குள்ளோ....

எங்கேயோ வீட்டின் இடுக்கிலோ...

பதுங்கிக்கிடக்கும்.......

நாட்காட்டியின்
கிழிந்த தாள்களல்ல அவை

வெள்ளை வெளேரென்று முதலிலும்

பழுப்படைந்து....மூப்பிலும்....

நிறங்கள் எவ்வாறு மாறினும்

எழுத்து சாவதில்லை.

ஆனந்தபிரசாத்

 

  • Pena Manoharan அருமை ஆனந்த் பிரசாத்.’எழுத்து சாவதில்லை’ .எழுக.எழுதுக.
  • VJ Yogesh //வெள்ளை வெளேரென்று முதலிலும்

    பழுப்படைந்து....மூப்பிலும்....


    நிறங்கள் எவ்வாறு மாறினும்

    எழுத்து சாவதில்லை.// ஒரு போதும் சாகாது..!
  • Seelan Ithayachandran நினைவிருக்கிறதா...நண்பா.
    'ஓ....சகோதரியே...'உன் கவிதை.

    திருமலை நகரின்
    வீதிச் சுவர்களில் நெற்றிக் கண்ணானது.
    மக்களை வெகுண்டெழச் செய்து,
    இன மத பேதமின்றி அணி திரட்டியது.

    40 ஆண்டுகள் கடந்தும்...
    அந்த எழுத்து இன்னும் சாகவில்லை தோழா......
    சாவினையும்
    அது சாகடித்துவிடும்.

    - இதயச்சந்திரன்
  • Seelan Ithayachandran என் எழுத்தின் மூலவர்களே இந்த நண்பர்கள்தான். அதைக்கூறுவதில் எந்தச் சங்கடமும் எனக்கு இல்லை. நான் மிக மிகச் சிறியவன். என்னை இன்னமும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அற்புதங்கள் இவர்கள்.
    புதுவை நீ எங்கேயடா........காகிதத்தைப்பார் . அசந்து விடுவாய்.
  • Thiru Thirukkumaran வெள்ளை வெளேரென்று முதலிலும்

    பழுப்படைந்து....மூப்பிலும்....
    ...See More
  • Vanitha Solomon Devasigamony உயிரோட்டமான கவிதை . அருமை .
    " வெள்ளை வெளேரென்று முதலிலும்
    பழுப்படைந்து....மூப்பிலும்....
    நிறங்கள் எவ்வாறு மாறினும் எழுத்து சாவதில்லை".
  • குழந்தைநிலா ஹேமா எழுத்துக்கள் பிறப்பது சாவதற்காகவுமில்லை.அருமை வெள்ளாப்பு !
  • Santhiya Thiraviam நாட்காட்டியின் கிழிந்த தாள்களல்ல அவை

    வெள்ளை வெளேரென்று முதலிலும்


    பழுப்படைந்து....மூப்பிலும்....

    நிறங்கள் எவ்வாறு மாறினும்

    எழுத்து சாவதில்லை.
  • Santhiya Thiraviam கவிதை . அருமை
  • Kiruba Pillai வாவ் ..கவிதை கவிஞரே ...எழுத்து சாவதில்லை காதலும் தான் -வெள்ளை வெளேரென்று முதலிலும் ...பழுப்படைந்து மூப்பிலும் ..மாறாத பெண்மையும்- ..நவரசங்களுடன் தாங்களும் ...நல்லதோர் கவிதை மனதுக்கு வெகு ருசி...இன்னும் பல கவிதைகளுக்கு காத்திருக்கிறோம் .
  • Subramanian Ravikumar எழுத்து சாவது மட்டுமில்லை மூப்படைவதில்லை பழுப்படைவதில்லை...
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "எழுத்து சாவதில்லை..." அருமை
  • Vettivelu Selliah Gunaratnam எல்லா -எல்லோருடைய எழுத்துக்களும் சாவதில்லை ,என்றாலும் ,
    காணமல் போவதுண்டு !

No comments:

Post a Comment