Friday, August 9, 2013

தறிகெடாமல்...!

 




பாசி அடர்ந்திருந்த

கிணற்றின் கட்டில்

அடித்து துவைத்துக்கொண்டிருந்தேன்

மனசாட்சி கந்தலை...

கல்நெஞ்சக்காரன் நான்

தும்பைப்பூவாகுமென!

அதுவோ....

பூர்வ ஜன்மமெடுத்தேன்.....என

இழையிழையாய் நூல் பிரிந்து

சிலந்தி.....வலை பின்னியதேபோல்!

வாழ்வின் நூலிழையாய்

நம்பிக்கையும் எதிர்மறையும்

மீளவும்.....மீளவும்.....

ஊடும் பாவுமாக

நெய்யும் தறிக்குள் லயசுத்தமாக

நுழைந்து......நுழைந்து.....

என் பாதங்கள்

உராய்ந்த மண்ணையும்

இளமையையும்...

கூட்டிவைத்து துகில் கோர்த்து

பின்னிய புதுப்போர்வைக்குள்

எனக்கு

புனர் ஜன்மம் கொடுத்து

மீட்டுத்தருவதாக......

வாக்குறுதியளித்தது.

ஆனந்தபிரசாத்.
  • Subramanian Ravikumar கொஞ்சம் வலிந்து நெய்தது போல் உள்ளது...
  • Anand Prasad Subramanian Ravikumarவலிகளை, ரணங்களை இதனை விடவும்
    சுவாரஸ்யமாக என்னால் சொல்லத்தெரியவில்லை....நண்பரே!
  • Subramanian Ravikumar வாழ்க்கை மண்... வலிகள் விதைகளாக... ரணங்களாய் வேர்விட்டு... தளிர்களாய்க் கிளைக்கிறது கவிதை... எல்லாப் படைப்புக்களுமே சொல்வதற்கான முயற்சிகள் தான்...சொல்லியிருக்கிறோமா? இல்லையா? என்பது சென்று சேர்கிற இடத்தின் எதிர்வினைகளே தீர்மானிக்கின்றன...
  • Kiruba Pillai பாசி அடர்ந்திருந்த

    கிணற்றின் கட்டில்

    அடித்து துவைத்துக்கொண்டிருந்தேன்


    மனசாட்சி கந்தலை...

    கல்நெஞ்சக்காரன் நான்

    தும்பைப்பூவாகுமென!

    அதுவோ....

    பூர்வ ஜன்மமெடுத்தேன்.....என

    இழையிழையாய் நூல் பிரிந்து

    சிலந்தி.....வலை பின்னியதேபோல்!

    வாழ்வின் நூலிழையாய்

    நம்பிக்கையும் எதிர்மறையும்

    மீளவும்.....மீளவும்.....//class kavignare ..
  • Gopaal Naathan பாசி அடர்ந்திருந்த
    கிணற்றின் கட்டில்
    அடித்து துவைத்துக்கொண்டிருந்தேன்
    மனசாட்சி கந்தலை.//மிக அருமை.
  • Waragunan Nadarajah nice..............
  • Pena Manoharan ”தறி கெடாமல்...” தறியைச் சிறப்பாகவே நகர்த்தி நெய்திருக்கிறீர்கள்.வலியை.ரணங்களை அப்படித்தான் சொல்ல முடியும்.சத்திர சிகிச்சைக்கு ஆயுதம் இல்லாமல் எப்படி?வையைக் கரையிலிருந்து நல்வாழ்த்துக்கள் ஆனந்பிரசாத்.
  • Thiru Thirukkumaran பாசி அடர்ந்திருந்த

    கிணற்றின் கட்டில்

    அடித்து துவைத்துக்கொண்டிருந்தேன்


    மனசாட்சி கந்தலை...

    கல்நெஞ்சக்காரன் நான்

    தும்பைப்பூவாகுமென!

    அதுவோ....

    பூர்வ ஜன்மமெடுத்தேன்.....என

    இழையிழையாய் நூல் பிரிந்து

    சிலந்தி.....வலை பின்னியதேபோல்!

    வாழ்வின் நூலிழையாய்

    நம்பிக்கையும் எதிர்மறையும்// அருமை
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan வரஜவரியாக இரசித்தேன். "பின்னிய புதுப்போர்வைக்குள்
    எனக்கு
    புனர் ஜன்மம் கொடுத்து
    மீட்டுத்தருவதாக......"
  • Vanitha Solomon Devasigamony வாழ்வின் நூலிழையாய்
    நம்பிக்கையும் எதிர்மறையும்
    மீளவும்.....மீளவும்.....
    ஊடும் பாவுமாக
    நெய்யும் தறிக்குள் லயசுத்தமாக
    நுழைந்து......நுழைந்து.....
  • VJ Yogesh நம்பிக்கையும் எதிர்மறையும் கலந்து... காலத் தறி நெய்யும் துணி தான் வாழ்வு...! தத்துவார்த்தமான கவிதை அண்ணா!
  • Anand Prasad Subramanian Ravikumar''வாழ்க்கை மண்... வலிகள் விதைகளாக... ரணங்களாய் வேர்விட்டு... தளிர்களாய்க் கிளைக்கிறது கவிதை... எல்லாப் படைப்புக்களுமே சொல்வதற்கான முயற்சிகள் தான்...சொல்லியிருக்கிறோமா? இல்லையா? என்பது சென்று சேர்கிற இடத்தின் எதிர்வினைகளே தீர்மானிக்கின்றன...
    நல்ல கருத்து நண்பரே.
    சொல்லவேண்டியவைகளை குறியீடாகவாவது
    சொல்ல முயன்றிருக்கிறோமா என்பது ???
    அதுவும் தாக்கமேற்படுத்தும் வகையில்.......!!!
    நாசூக்காகவும்.... யாரும் ...யாரையும் நோகாமலும்.....
    நளினபுத்தியுடன்தான் நவின்றிருக்கிறோம்
    நாளதுவரையில்.....
    இந்த நபும்சகத்தன்மை அகன்று....
    நேசத்துடனும்....நெஞ்சத்துணிவுடனும்.....
    வாழ்நாளில்
    பட்டழிந்து வாழ்நாளில் பட்டதுயர் இழைபிரிந்து
    தட்டியுமை நெய்யும் தறியூடு பாவி....எனக்(கு)
    இட்டதொரு வாழ்வினையும்
    இழந்துபட சொல்வீரோ?
    பட்ட வலிகளைத்தான் பதியலாம்....
    பதிவிறக்கம்....
    முற்றிலும் உங்கள் முகனுலின் சுதந்திரமே!
    எதிர்வினையைப்பற்றி எனக்கென்ன கவலை?
    சுதந்திரமே எனக்கான இன்றைய நிலைமை!
  • Subramanian Ravikumar அன்புள்ள ஆனந்த்,
    கவிதை குறித்த எனது கருத்துக்களை ஒரு இரசிகன் என்ற முறையிலேயே முன்வைத்தேன்...
    மற்றபடி உங்கள் கவிமனதை ஏதும் செய்யும் நோக்கத்துடனல்ல... குறியீடு
    மீக்குறியீடாய் மாறுகிறபோது... கவிதையில் வலிந்த தன்மையும்... வாசக மனத்துள்
    பயணிக்கும் நகர்வும்
    குறைவுபட்டுப் போகிறது என்கிற கவிதை அக்கறையில்
    சொல்லப்பட்டதே... புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...

    16 ஜூன், 2013 6:03 AM அன்று, Facebook <
  • Jeyarany Norbert பாசி அடர்ந்திருந்த
    கிணற்றின் கட்டில்
    அடித்து துவைத்துக்கொண்டிருந்தேன்
    மனசாட்சி கந்தலை.மிக அருமை.
  • Nalayiny Thamarachselvan · 122 mutual friends
    பாசி அடர்ந்திருந்த

    கிணற்றின் கட்டில்

    அடித்து துவைத்துக்கொண்டிருந்தேன்


    மனசாட்சி கந்தலை...

    கல்நெஞ்சக்காரன் நான்

    தும்பைப்பூவாகுமென!
  • Anand Prasad Subramanian Ravikumarநண்பரே....
    நீங்கள் ஒன்றும் என் மனதைப்புண்படுத்தவில்லை.
    மன்னிப்புக்கோர அவசியமுமில்லை.
    முகநூல் வழியாகவேனும் உங்கள் நட்பை
    மிக நேசிக்கிறேன்..அதனையிழக்க நான் தயாராக இல்லை.

    உங்கள் விமர்சனப்பார்வை எழுத்து என்ற தரத்தில்
    என்னை மேம்படுத்த உதவும்....சந்தேகமில்லை.
    ஏலவே புண்பட்டுப்புழுத்த என் மனத்தகத்தே....
    எழுந்த எரிச்சலை எனக்குத்தெரிந்த மொழியில்
    ஏதோவொரு வேகத்தில் கொட்டிவிட்டேன்!
    காலத்திற்குக் காலம் இவ்வாறாக நிகழும்!!!
    ஒன்றுக்குமுதவாமல் அன்னிய மண்ணில்
    உஞ்சவிருத்தி செய்யும் எனக்கு இந்தப்புழுக்கத்தின்
    விசனங்களைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
    என்னை நீங்கள் தான் மன்னிக்கவேண்டும்.
    இந்த விசனங்களிலிருந்து விடுபடவேண்டும்...
    இதற்காக மட்டுமே கவிதையோ என்ன இழவோ.....
    எழுதுவதை வடிகாலாக்கிக்கொண்டேன்......
    ஜீவநதி ஓட வேண்டுமல்லவா?
  • Subramanian Ravikumar உணர்வுப் பிழம்பாய் இருக்கின்றாய் நண்பா... நட்புக்கு நன்றி...
  • Naavuk Arasan கவிதைபோல நீங்கள் எழுதிய " கொமண்ட் கள்" ,, எளிமையான மொழியில் நல்ல கவிதை போல இருக்கே Anand Prasad
  • Aangarai Bairavi Nadai arumai. Alavedutha sorkkattu.tariyil kidakkum palarin vazhuvm ippadithaan odugiradhu.ennaththari kedamal nadakka pakkuvame theavai ena sollum kavithai.
  • Kuppilan Shanmugan rasiththup padiththen.
  •  

No comments:

Post a Comment