Monday, June 17, 2013

சூர்யநமஸ்காரம்.

 


எனக்காகவும்
ஒரு கீற்றைத் தெளித்த
நிலவை விழுங்கி
புளியேப்பம் விட்டன இரவுகள்...
பாலப்பத்தை
மிக நேர்த்தியாக
கபளீகரம் செய்தது
இருளின் நிழல்....
நிழலில் ஒதுங்கிய நிஜங்கள்
பகலுக்காய் பதுங்கின....!
இருப்பின்....இருப்பே.....நாளையென்று.....
பல்லைக்கடித்தபடி.....
கிழக்கொன்றும் புலரவில்லை
கீழ்வானின் செப்படிவித்தைகள்
சூம்பிப்போனது
சூரியனின் ரஸவாதங்கள்...
பாம்புப்பிடாரனின்
கீரிப்பிள்ளை விளையாட்டாக......
நான்.....
மேற்கில் உதிப்பதே மேல்!!!
ஆனந்தப்ரசாத்.
  • Nathan Gopal இருளின் நிழல்....
    நிழலில் ஒதுங்கிய நிஜங்கள்
    பகலுக்காய் பதுங்கின....!
  • Subramanian Ravikumar சூம்பிப் போயின என்றிருந்தால் பிழையின்றி இருக்கும். ஒருவிதமான அரசியல் தன்மையிலும் கவிதை அமைந்துள்ளது, கிழக்கின் போராட்டங்களின் மீது இழந்த நம்பிக்கையாய்க் கவிதை வெளிப்பட்டுள்ளது. மேற்குலக வாழ்வோடு நீங்கள் மேலும் இயைந்து கொண்டிருப்பதை இது குறிப்பிடுவதாக நான் புரிந்துகொள்கிறேன்... ஆனந்த்...
  • Rajaji Rajagopalan ஆனந்த் போன்றவர்களின் கவிதைகளை விளங்கிக்கொள்வது எத்துணைக் கடினமான காரியம் என்பதை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். அதனாலேயே இவரின் இக்கவிதையையும் மிக அவதானத்துடனேயே அணுகினேன். ஆனால் நான் புரிந்துகொண்டவரையில் அன்பர் Subramanian Ravikumar அவர்கள் கூறுயதுபோல் அரசியல் எப்படி இங்கே நுழைந்ததெனக் கண்டுகொள்ளுமுடியாமலிருக்கிறது. திரு சுப்பிரமணியன் வலியச் செய்துகொண்ட Interpretation ஆக இருக்குமோவென ஐயுறவேண்டியிருக்கிறது. ஆனந்த்தான் இந்தச் சிக்கலை விடுவிக்கவேண்டும்.
  • Anand Prasad இதில் சிக்கலொன்றுமில்லை!
    இன்று மாலை நான் செக்கிழுத்துவிட்டு திரும்பிவரும்போது
    ஜல்லிக்கட்டுக்காளையாக புல்லுக்கட்டைத்தேடி கும்பகோணத்து
    தெருக்களிலே புழுதியிறைத்து நடந்துவரும்போது......
    அள்ளிக்கட்டிய அடிநாளின் அம்சங்கள் மல்லுக்கட்டியது...!

    அதன் விளைவாய் மனத்திடை ஓர் பாட்டுக்கட்டியது.....அவ்வளவே.
    வேறொன்றுமறியேன் பராபரமே!!!
    தங்கள் மொழிபெயர்ப்புகளுக்கு மிக்க நன்றி.
  • N.Rathna Vel அருமை. நன்றி.
  • Thiru Thirukkumaran பாம்புப்பிடாரனின்
    கீரிப்பிள்ளை விளையாட்டாக......
    நான்.....
    மேற்கில் உதிப்பதே மேல்!!!// great
  • VJ Yogesh //இருப்பின்....இருப்பே.....நாளையென்று.....
    பல்லைக்கடித்தபடி.....// //பாம்புப்பிடாரனின்
    கீரிப்பிள்ளை விளையாட்ட
    ாக......
    நான்.....
    மேற்கில் உதிப்பதே மேல்!!!// ஒரு பாசங்குமில்லாமல் யதார்த்தத்தை கூறிய விதம் அருமை அண்ணா..!
  • Jeyarany Norbert பாம்புப்பிடாரனின்
    கீரிப்பிள்ளை விளையாட்டாக......
    நான்.....
    மேற்கில் உதிப்பதே மேல்!!! Very nice
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan இரசித்தேன் வரிகளை...."புளியேப்பம் விட்டன இரவுகள்...
    பாலப்பத்தை
    மிக நேர்த்தியாக.."

No comments:

Post a Comment