Friday, August 9, 2013

வார்ப்பு

 


ஒருவழிப்பாதையில்

ஓடிய காலங்கள்

ஓய்வதுவும் எந்தநாளோ?

கருவிலிருந்தே

கால் விளையாடி

களித்த நிலம் கனவாகுமோ?

கானலை நீராய் மனவெளியில்

காணலெனும் நிலை

கனவாயாகுமோ?

வேனிலை ஆழ்மனம்

வெறுத்தே போகுமோ?

வெந்தநிலை மாறுமெந்த

வேளையோ?

காத்திருப்போம்....தினம்

பார்த்திருப்போம் எங்கள்

பாதைகளில் பூக்களாமோ?

கருவிலிருந்தே

காலமெல்லாம் மழை

காணா பூமியும்

கனவாய் ஆகுமோ?

பருவ நிலைகளில்

பயணம் போகுமோ?

பனிமழை மாறுமெந்த வேளையோ?

நேற்று நடந்தவை

நிழலாயிருக்கட்டும்.....

காற்று தரும் தென்றலாமோ?

நேத்திரங்கள் தரும்

நீரலைகள் எம்மை

வார்த்தெடுக்கும் அன்பிலாமோ?

ஆனந்தப்ரசாத்.
  • VJ Yogesh 'கருவிலிருந்தே

    கால் விளையாடி

    களித்த நிலம் கனவாகுமோ?'
  • VJ Yogesh 'நேத்திரங்கள் தரும்

    நீரலைகள் எம்மை

    வார்த்தெடுக்கும் அன்பிலாமோ?'
  • N.Rathna Vel அருமை. நன்றி.
  • Rajaji Rajagopalan எத்தனையெத்தனை கேள்விகள்? இவற்றுக்கெல்லாம் எங்கே பதில்கள் பொதுக்கிவைக்கப்பட்டுள்ளன? கவிஞர் கேள்விகளைக் கேட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். ஆனால் இந்தப் படத்தையும் தந்து அதன்மூலம் சூசகமாகப் பதிலையும் கூறமுனைகிறாரோவென எனக்குள் சந்தேகம் எழுகிறது.

    காத்திருப்போம்....தினம்
    பார்த்திருப்போம் எங்கள்
    பாதைகளில் பூக்கள்
    பூக்கும்வரை பார்த்திருப்போம்!
  • Subramanian Ravikumar எளிமையும் அழுத்தமுமான கவிதை ஆனந்த்...
  • Pena Manoharan ’...கருவிலிருந்தே/ கால்விளையாடிக் / களித்த நிலம் கனவாகுமோ..’ படத்தில் உள்ள மனிதர் தெளிக்கும் தண்ணீரில் கலந்திருக்கிறது என் கண்ணீர்.அருமை ஆனந்த பிரசாத்.தாமதமான் பார்வைக்கும் பதிவிடலுக்கும் பொறுத்தருள்க.
  • Ganeshalingam Kanapathipillai கானலை நீராய் மனவெளியில்

    காணலெனும் நிலை

    கனவாயாகுமோ?

    கானலை நீராய் மனவெளியில்

    காணலெனும் நிலை

    கனவாயாகுமோ மிக அற்புதம் பிரசாத்.....
  • Thiru Thirukkumaran கருவிலிருந்தே

    கால் விளையாடி

    களித்த நிலம் கனவாகுமோ?//
  • குழந்தைநிலா ஹேமா நாளுக்கு நாள் இந்த ஏக்கமே நோயாகி நாளைக் குறைக்கிறது !
  • Jeyarany Norbert கருவிலிருந்தே

    கால் விளையாடி

    களித்த நிலம் கனவாகுமோ?//


    காத்திருப்போம்....தினம்
    பார்த்திருப்போம் எங்கள்
    பாதைகளில் பூக்கள்
    பூக்கும்வரை பார்த்திருப்போம்! Very nice
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan மண்ணைப் பிரிந்த ஏக்கம் ஒவ்வொரு வரிகளிலும்..
  • Vanitha Solomon Devasigamony ' வார்ப்பு ' கவிதையும் , காட்சியும்
    மனதை நெகிழ வைத்தது . நன்றி சகோதரர் ஆனந்தப்ரசாத் !

    ஒருவழிப்பாதையில் ஓடிய காலங்கள்
    ஓய்வதுவும் எந்தநாளோ?


    கருவிலிருந்தே கால் விளையாடி
    களித்த நிலம் கனவாகுமோ?

    வேனிலை ஆழ்மனம் வெறுத்தே போகுமோ?
    வெந்தநிலை மாறுமெந்த வேளையோ?
  • Kuppilan Shanmugan thallatha vayathilum thalaratha muyatchi matam valrppom manudam kappom.

No comments:

Post a Comment