Monday, June 17, 2013

உறைவிடம்


 



எனது சாளரத்தின் வழியாக

வரும் காற்றைக்கூட....நான்

நம்பியதில்லை

நீரோடித்தெளிந்த நிலைகளையும் கூட...!

பாடிப்பாடியே...

குரல் நாண்கள் அறுந்த பின்னும்

வீடு சுமக்கும் எத்தனங்கள்...

இந்த நாள் மிதக்கும்

என் சுமைகள் ஆழ்ந்தமிழாது......

ஆழ்கடல் பூக்கள்

என்னைக் கரை தள்ளும்.....

இயங்கியலின் சாராம்சம்

இருப்பை நிலை நிறுத்தும்....?

கேள்விகளுக்குள்ளே குறுகியாயிற்று.

என்னை பரிகசித்தேகும்

ஆற்றின் சுழிப்பிற்குள்

அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

வேருக்கடியில்........

மனிதரை புரிந்துகொண்டேன்.

ஆனந்தப்ரசாத்.




  • Rajaji Rajagopalan எனது சாளரத்தின் வழியாக

    வரும் காற்றைக்கூட....நான்

    நம்பியதில்லை...//


    தொடக்கமே சிந்திக்கவைக்கிறது!

    .... ஆழ்கடல் பூக்கள்

    என்னைக் கரை தள்ளும்.....//

    இப்போது நம்பிக்கை துளிர்க்கிறது!
    இறுதியில்...

    மனிதரை புரிந்துகொண்டேன்...//

    திருப்தியான முடிவு! சிந்தனைக்கு நிறைய வேலை தருகிறார், ஆனந்த்.

  • Nathan Gopal ஏதோவொரு நாணலின்
    வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன். //கவிதை மிகவும் நுண் தன்மையுடன் தூக்கலாக எழுகிறது.

  • Pena Manoharan அடடா...’என்னைப் பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு...ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்... மனிதரைப் புரிந்து கொண்டேன்’ படமெடுத்தாடுகிறது படிமப் பாம்பு.அருமை.வையைக் கரையில் வாசம் செய்யும் அநுராதபுரத்தானின் நல்வாழ்த்துக்கள்.

  • Subramanian Ravikumar உள் முகப் பயணம்...முடிவற்றது வாழ்வெனும் தேடல்...

  • Thiru Thirukkumaran இயங்கியலின் சாராம்சம்

    இருப்பை நிலை நிறுத்தும்....?

    கேள்விகளுக்குள்ளே குறுகியாயிற்று.//

  • N.Rathna Vel அருமை.

  • Vanitha Solomon Devasigamony பாடிப்பாடியே...
    குரல் நாண்கள் அறுந்த பின்னும்
    வீடு சுமக்கும் எத்தனங்கள்...

    என்னை பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு....

    ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன்.

  • VJ Yogesh 'ஆற்றின் சுழிப்பிற்குள்

    அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

    வேருக்கடியில்........
    ...See More

  • Kuppilan Shanmugan valvin thedalai arumaiyagach solliullirkal,

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "என்னைக் கரை தள்ளும்.....
    இயங்கியலின் சாராம்சம்
    இருப்பை நிலை நிறுத்தும்....?" நுணுகி அனுபவிக்க வேண்டிய கவிதை. வாழ்த்துக்கள்

  • Santhiya Thiraviam ஆற்றின் சுழிப்பிற்குள்

    அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

    வேருக்கடியில்........


    மனிதரை புரிந்துகொண்டேன்.

    Arumai Aumai

  • Santhiya Thiraviam வாழ்த்துக்கள்

  • Jeyarany Norbert பாடிப்பாடியே...
    குரல் நாண்கள் அறுந்த பின்னும்
    வீடு சுமக்கும் எத்தனங்கள்...
    என்னை பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு....
    ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன்.அருமை வாழ்த்துக்கள்.

  • Subramaniam Kuneswaran "என்னை பரிகசித்தேகும்
    ஆற்றின் சுழிப்பிற்குள்
    அகப்பட்டு...."

  • Kannathasan Krishnamoorthy கடவுளாலையே மனிதரைப் புரிந்து கொள்ள முடியாத இவ்வுலகில் நீங்கள் என்னமோ மனிதரைப் புரிந்து கொண்டது சாதனை தான்.வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் ஆழமான கவிதைக்கு...

No comments:

Post a Comment