Saturday, April 12, 2014

சிறை

 



ஓ ப்ரம்மதேவனே

என் ஸ்வாசப்பைகளை

ஏன்

விலாக்கூட்டினுள் அடைத்தாய்

ஓங்கியொலிக்கும் என் குரல்

சிறைக்கூடத்தின்

எட்டாத உயரத்திலிருக்கும்

சிறிய சாளரத்தினூடாக

பலஹீனமாக வெளியுலகுக்கெட்டியது

இசையென்கிறார்கள்....



ஆனந்தபிரசாத்
 

No comments:

Post a Comment