Saturday, April 12, 2014

உறைவு

 

 



ஆடு மாடு கோழி பன்றி

காடை கெளதாரி உடும்பு

முயல் மான் மரை திரளி

கயல் கரும்பாரை அறுக்குளா

கணவாய் இறால் கருந்திரளி சுறா

பிணமாய் குளிர்பதனிக்குள் உயிர்த்திருக்க

நானும்தான்

ஆனந்தபிரசாத்



சாயத்தை தந்துவிட்டு சுகியென்று அடிபணியும்

தேயிலையாய் வாழ்வென்ற தேய்வுக்குள் நட்பின்

தோய்வுக்குள் ஆழ்ந்து தொலைந்த நண்பனுக்கு....

வாயில்லை சொல்ல வார்த்தை வரவில்லை

நீயில்லை என்பதோர் நிஜமோநிழலோ அறியேன்

காயங்களாறும்....இவ்வரிகள் உனக்கேதான்.

அரசியலுக்கப்பால் எனதாழ்மனதை ஊடுருவி

உரசிய நண்பனுக்கு உரியது இந்த வரிகள்.

Like · ·
  • Rajaji Rajagopalan சாயத்தை தந்துவிட்டு சுகியென்று அடிபணியும்
    தேயிலையாய்...// தியாக சிந்தையுள்ள நட்புக்கு இதைவிட வேறென்ன உவமானம். தொலைந்த நண்பனுக்கு மனமார்ந்த புகழாரம்.
  • George Singarajah நீயில்லை என்பது நிஜமோ ....நிழலோ .....
    நெஞ்சு பதறுகிறது.
  • Jeyarany Norbert சாயத்தை தந்தது விட்டு சுகி
    என்று அடிபனியும் தேயிலையாய் மிக அருமை என் மனதை கவர்ந்த வரிகள்.
  • Nishanthan Sathanandasivan · 8 mutual friends
    சாயத்தை தந்தது விட்டு சுகி
    என்று அடிபனியும் தேயிலையாய் ......தமிழ்
  • Kiruba Pillai அரசியலுக்கப்பால் எனதாழ்மனதை ஊடுருவி

    உரசிய நண்பனுக்கு ....
  • Thiru Thirukkumaran அன்பின் கண்கள் முன் அரசியல் மறையுமென்ற தெம்பைத் தந்த கவி
  • Vanitha Solomon Devasigamony .....வாழ்வென்ற தேய்வுக்குள் நட்பின்
    தோய்வுக்குள் ஆழ்ந்து தொலைந்த நண்பனுக்கு..
  • Narayana Moorthy //தோய்வுக்குள் ஆழ்ந்து தொலைந்த நண்பனுக்கு....// தோய்வுக்குள்.... ஆழ்ந்து.... தொலைந்த..... (பிரசாத் முன்பொருமுறை வேறொரு கவிதையில் எழுதிய வரிகளை ந‌‌‌ினைவுபடுத்தி கீழே பின்னூட்டமாக இடுகிறேன்:
    ”நான் உன்னைத் தோற்கவில்லை
    வரலாறு

    என்னைத் தோற்றுவிட்டது.”)
  • VJ Yogesh //சாயத்தை தந்துவிட்டு சுகியென்று அடிபணியும்

    தேயிலையாய் வாழ்வென்ற தேய்வுக்குள் நட்பின்


    தோய்வுக்குள் ஆழ்ந்து தொலைந்த நண்பனுக்கு....//
  • Latha Vedantham உறைந்து போன மனதிற்குள்ளும்
    ஊற்றாய் ஓடிகொண்டிருக்கும்
    நட்பெனும் ஜீவ நதி

    ஆனந்த பிரசாத் !\

No comments:

Post a Comment