Friday, March 15, 2013

கண்ணிமைக்கும் பொழுதில்.....!


கண்ணிமைக்கும் பொழுதில்
கடலின் அலைகள் கதை முடிக்கும்
சின்ன அரும்புகளோ
கரையில் விழிநீர் கதையெழுதும்.......
(கண்ணிமைக்கும்)
ஓலைகளை ஓடுகளாய் மாற்றியவர்
ஒரு நாள் ஒருபொழுதில்
ஓலங்களை வரவுவைத்து ஓய்ந்ததென்ன
தரையில் ஆழ்கடலில்
மாளாத சோகத்தில் மலரும் பூக்கள்
மாறாது மாறாதினி வளரும் நாட்கள்....
இதில் மொழியென்ன
மதமென்ன
நிறமென்ன மனிதா......
(கண்ணிமைக்கும்)
வறுமையிலும் வாழ்வினையே தேடியவர்
வளமே நாடியவர்
பிறவி பெருங்கடலை நீந்துமுன்னே
பிணமாய் ஆனவர்கள்
தெளிவில்லை எண்ணிக்கை
தெரியாத நம்பிக்கை
இனியில்லை இனியில்லை
இதுதான் உண்மை....
இதில் மொழியென்ன
மதமென்ன
நிறமென்ன மனிதா......
(கண்ணிமைக்கும்)

  • Singarajah George how long its been going on.....
  • Pena Manoharan 'சூர சம்ஹாரத்தின் சூத்திரம் தெரியும்/இந்த ஈர சம்ஹார்த்தின் இதிகாசம் என்ன?.பிறவிக்கடல் நீந்துமுன் எத்தனை குளம்,குட்டைகள்,காட்டாறுகள்.இவைகளைத் தாண்டித்தான் தளிக்கிறது மனிதம்.வையையின் வாழ்த்துக்கள்.
  • Thiru Thirukkumaran இதுதான் உண்மை....
    இதில் மொழியென்ன
    மதமென்ன
    நிறமென்ன மனிதா...//
  • Subramanian Ravikumar மனிதத்துக்கான நல்ல கவிதை ஆனந்த்.. வாழ்த்துக்கள்...மனித குலம் வாழ..
  • VJ Yogesh நன்றாகவுள்ளது அண்ணா... விரைவில் இதனை இசை வடிவில் கேட்க ஆவல்!
  • Vathiri C Raveendran பிணமாய் ஆனவர்கள்

    தெளிவில்லை எண்ணிக்கை

    தெரியாத நம்பிக்கை
    ...See More
  • Kiruba Pillai intha kavithaiyai parththathum naan oru isiayaiyum parthen intha varikalil . arumaiyaana karuththu . matham ennum maayam sumanthu thirivorkku avasiyamaaka poi sera vendiyathu . nanri kavignare
  • மன்னார் அமுதன் //இதில் மொழியென்ன
    மதமென்ன
    நிறமென்ன மனிதா....// அருமையான கவிதை
  • Muthulingam Kandiah உண்மையான வாழ்க்கை நிலையை உணர்வு பூர்வமான வடிவத்தில் தெளிவுடன் தந்துள்ளது பாராட்டுக்குரியது....இசைவடிவத்தில் வந்தால் அனைவரும் அறிந்து கொள்வார்கள்
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "பிறவி பெருங்கடலை நீந்துமுன்னே
    பிணமாய் ஆனவர்கள்
    தெளிவில்லை எண்ணிக்கை.." துடிக்கிறது மனது வரிகளில் மூழ்கையில்.

No comments:

Post a Comment