Thursday, April 11, 2013

ஓட்டம்......


ஒழுகிய விந்தின்
கடைசித்துளி உலருமுன்பு
சிலுவைக்கும்...சீருடைக்கும்
பயந்துபோய் ஓடிவிட்டேன்

ஆணிகளைத் தூக்கிக்கொண்டு
அவர்கள் துரத்தியும்
அறைய முடியவில்லை

ஒரு எல்லைக்குமேல் துப்பாக்கிகள்
வலுவிழந்து போயின
ஆணிக்குத் தப்பி விட்டேன்
முள்முடிக்கும் தப்பி விட்டேன்

இராட்சத 'பூட்ஸ்' களுக்கடியில்
இறந்து படாமலும் கூட....

இங்கேயோ.....
வான்கோழிச் செட்டைக்குள்

பத்திரமாய், பாதுகாப்பாய்
தொடரும் வாழ்வு
கனவுகளில் சாப்பாடு
கையோடு தாம்பத்யம்
மனச் சூட்டினின்றும்
பாதுகாத்துக் கொள்ள...
ஆசைச் செருப்பை
அணிந்து கொண்டேன்

பொய்யென்று புரியுங்கால்
போதைத் துணையிருப்பு

'டாலர்' சிறகடித்து
பொய்வானை வட்டமிட்டேன்

மலத்துக்குள் திளைக்கும்
வண்டாக.....
உருண்டோடும் காலம்

நாளாக நாளாக
ஆசைகளை துரத்திக்கொண்டு
ஆணிகள் மட்டும் வந்தன
ஒவ்வொன்றாய்...முதலிலும்
என் உடலின் ஜீவ அணுக்களுக்கு
சமமாக முடிவிலும்....

மீண்டும் ஓடவாரம்பித்தேன்
என் சிறகு பிய்ந்து போய்
செருப்பு அறுந்து போய்

ஒரு எல்லைக்கு மேல் என்னால்
நகர முடியவில்லை.....

உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
ஆணிகளாய் அறைந்தன.

ஆனந்தபிரசாத்.

  • Nathan Gopal நாளாக நாளாக
    ஆசைகளை துரத்திக்கொண்டு
    ஆணிகள் மட்டும் வந்தன
    ஒவ்வொன்றாய்...முதலிலும்
    என் உடலின் ஜீவ அணுக்களுக்கு

    சமமாக முடிவிலும்....
    அருமையான வரி
  • VJ Yogesh //மீண்டும் ஓடவாரம்பித்தேன்

    என் சிறகு பிய்ந்து போய்

    செருப்பு அறுந்து போய்...//


    வாழ்தலின் யதார்த்தத்தை வரிகள் சுமக்கின்றன..!
  • Thiru Thirukkumaran பெரு மூச்சைச் தவிர வேறு என்ன தான் என்னால் சொல்ல முடியும்? தாக்கப்பட்டறிவால் மனசைத் தொட்ட கவி
  • Sanjayan Selvamanickam மிகவும் ரசித்தேன்
  • Pena Manoharan சிந்தனை தெளிவாக இருக்கும்வரை சிலுவையில் அறையப்படுவதும் பின் உயிர்த்தெழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.அதுதான் உயிரோட்டமுள்ள படைப்பாகப் பரிமளிக்கும்.வாழ்த்துக்கள் ஆனந்த் பிரசாத்.
  • Ganeshalingam Kanapathipillai ஓட்டம் என்றதலைப்பில் மிக அருமையான கவிதை..பிரசாத் கவிதை நூல்கள் இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா?
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அற்புதமான படைப்பு.
  • Vanitha Solomon Devasigamony நாளாக நாளாக
    ஆசைகளை துரத்திக்கொண்டு
    ஆணிகள் மட்டும் வந்தன
    ஒவ்வொன்றாய்...முதலிலும்
    என் உடலின் ஜீவ அணுக்களுக்கு

    சமமாக முடிவிலும்....

    மீண்டும் ஓடவாரம்பித்தேன்
    என் சிறகு பிய்ந்து போய்
    செருப்பு அறுந்து போய்

    ஒரு எல்லைக்கு மேல் என்னால்
    நகர முடியவில்லை.....

    உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
    ஆணிகளாய் அறைந்தன.
  • Aangarai Bairavi Oru maranathai ull vaangi padhivu seivadhu pola irundhadhu.
  •  
     

No comments:

Post a Comment