Tuesday, August 14, 2012

தேடல்

தேடல்

by Anand Prasad on Sunday, August 12, 2012 at 11:03pm ·

இன்னும் கொஞ்ச நாள் தான்
இருந்து விட்டால் போதும்
மாற்றி விடலாம்!!!
வேர்களுக்கு சுவாசம்
வேண்டியிருக்கிறது
பிரம்மச்சரியத்தைப்
பிடித்தெல்லாம் போதும்
வெளிறிப்போய் இருந்தாலும்
வேர்கள் அழகானவைதான்
பூக்கள் சில நாளைக்கு
நீரை உறிஞ்சட்டும்
மண்ணுக்கு இப்போது
மலடு தட்டிப் போகிறது
குழந்தைகளின் பிறப்பு
கொஞ்ச நாள் நிற்கட்டும்
இழந்து விட்ட காற்றின்
இருப்பை கணக்கெடுப்போம்
பூமிக்கும் ஈர்ப்பு
புளித்துப் போயிருக்கலாம்
வெப்பத்தை நெருப்பு
விவாகரத்து செய்து விட
ஆகாயப் படுக்கை
அலங்கோலமாயிற்று
நிர்க்கதியாய் நிலத்துக்கு வந்த
வெப்பத்தைத் தாங்க
மனித தோலில்
ஆடை கொள்ள
ஆடுகள் கூட அஞ்சுகின்றன
பிரமாண்டமான ஆலைகளின்
பீரங்கிகளில் வழிந்த
மனித மூத்திரத்தை
மேகம் களவெடுக்க
உலகம் மீட்டதில்
அமிலக் குளியல்
பஞ்சத்தில் அடிபட்டு
பூதங்களுக்குள் யுத்தம்
எஞ்சியதையும் அழிக்க
ஆதி சிவன் ந்ருத்தம்
தந்திரத்தின் உச்சத்தில்
தனித்துவிட்ட மனிதம்
அந்தரத்தில் போகையிலே
அற்றுவிடும் புனிதம்
ஈர்ப்பை விட...பூமிக்கு
உயிர்ப்புத்தான் தேவை
அண்ணாந்து தேடியதில்
ஆனதொன்றும் இல்லை....அதால்
பூமியைப் பிளந்து
புகுந்து தேடுவோம்
எங்காவதொரு வாழ்வு
இருக்கும்.....நிச்சயமாய்!

ஆனந்தபிரசாத்.
    • Kiruba Pillai பூமியைப் பிளந்து
      புகுந்து தேடுவோம்
      எங்காவதொரு வாழ்வு
      இருக்கும்.....நிச்சயமாய்!//;(+:)+mhum ...
      Sunday at 11:15pm · · 1
    • Emiliyanus Judes பூமியைப் பிளந்து

      புகுந்து தேடுவோம்

      எங்காவதொரு வாழ்வு
      Yesterday at 3:56am · · 1
    • Thiru Thirukkumaran
      பிரம்மச்சரியத்தைப்

      பிடித்தெல்லாம் போதும்

      வெளிறிப்போய் இருந்தாலும்
      ...

      வேர்கள் அழகானவைதான்

      பூக்கள் சில நாளைக்கு

      நீரை உறிஞ்சட்டும்//
      See More
      Yesterday at 5:45am · · 1
    • Nadchathran Chev-Inthiyan How come ur Poetry in Indian TamilPoetry's style and language
      Yesterday at 8:32am · · 1
    • Arasan Eliyathamby இன்னும் கொஞ்ச நாள் தான்
      இருந்து விட்டால் போதும்.... நன்றாக இருக்குது, வாழ்த்துக்கள் ! அப்புறம் செவிந்தியன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் நண்பரே ?
      Yesterday at 10:52am · · 1
    • Vj Yogesh ‎"தந்திரத்தின் உச்சத்தில்

      தனித்துவிட்ட மனிதம்

      அந்தரத்தில் போகையிலே

      அற்றுவிடும் புனிதம்"
      Yesterday at 11:00am · · 1
    • Vj Yogesh
      ‎"....அதால்

      பூமியைப் பிளந்து

      புகுந்து தேடுவோம்
      ...

      எங்காவதொரு வாழ்வு

      இருக்கும்.....நிச்சயமாய்!"
      See More
      Yesterday at 11:01am · · 1
    • George Singarajah இந்தக் கவிதை மழையில் நனைந்து நான் என்னை iznthen
      Yesterday at 2:28pm · · 1
    • Anand Prasad Arasan Eliyathambyசெவ்விந்தியர்களுடைய பாசை(ஷை)
      எனக்குத் தெரியாது நண்பரே. நான்
      எலு(ழு) த்துப் பிலை(ழை) கலை(ளை)
      எதிர்ப்பவன். தமில்(ழ்) மொலி(ழி) யை ந(நே)சிப்பவன்.
      22 hours ago · · 3
    • Arasan Eliyathamby உங்களுக்கு நல்ல நகைசுவை உணர்வு உள்ளது ! அப்புறம் என்ன அதிலயும் ஆனந்தமா புகுந்துவிளையாடுங்க Anand Prasad !
      15 hours ago · · 2

No comments:

Post a Comment