Tuesday, August 14, 2012

மாறுதல்

மாறுதல்

 

இருட்டு ஒரு

பகல் செய்தது

எல்லோருக்கும் முகங்கள்

இருந்தன அப்போது

இரசம் பூசிய கண்ணாடிகள்

கண்டுபிடிக்கப்படவில்லை

ஒருவரை ஒருவர் பார்த்து

முகங்களை

புரிந்து கொண்டார்கள்

வெளிச்சம்

ஒரு இரவு செய்தது

முகங்களை யாரும்

வைத்திருக்கவில்லை......

முகம் தேடும் கண்ணாடிகள்

உருவாகின

ஒளி....

அஞ்ஞாதவாசம் போயிற்று

கண்களுக்கு

முகங்கள் புலப்படவில்லை

காலம் இரவைக்

கரைத்துக் கொண்டிருந்தது

எஞ்சிய முகங்களுக்காக

இருட்டு

மீண்டுமொரு பகல்

தயாரித்துக் கொண்டிருக்கிறது

ஆனந்தபிரசாத்.
    • Thiru Thirukkumaran காலம் இரவைக்
      கரைத்துக் கொண்டிருந்தது
      எஞ்சிய முகங்களுக்காக
      இருட்டு
      மீண்டுமொரு பகல்
      தயாரித்துக் கொண்டிருக்கிறது//
      July 30 at 9:47pm · · 4
    • Vj Yogesh ம்ம்.... முகங்களை புரிவதிலேயே காலம் கழிகிறது..! யதார்த்தம் boss!
      July 30 at 9:53pm · · 2
    • Ravi Kathir True. very hard to understand the people.
      July 30 at 10:39pm · · 1
    • Anand Prasad That's why we are all so comfortable with face book! Ravi Kathir
      July 30 at 10:54pm · · 1
    • Ravi Kathir If we all are comfortable, that mean we have something in common.
      July 30 at 10:57pm ·
    • Anand Prasad Yes...faceless!
      July 30 at 10:59pm ·
    • Emiliyanus Judes
      காலம் இரவைக்

      கரைத்துக் கொண்டிருந்தது

      எஞ்சிய முகங்களுக்காக
      ...

      இருட்டு

      மீண்டுமொரு பகல்

      தயாரித்துக் கொண்டிருக்கிறது
      See More
      July 31 at 2:22am · · 1
    • Kannathasan Krishnamoorthy மனித வாழ்வை அன்றிலிருந்து இன்றுவரை படம் பிடித்துக் காட்டுகிறது உங்கள் (கண்ணாடி) கவிதை. ஆழமான வரிப்பிரயோகம் மிக அருமை...
      July 31 at 6:17am · · 2
    • Pa Sujanthan வெளிச்சம்

      ஒரு இரவு செய்தது

      முகங்களை யாரும்

      வைத்திருக்கவில்லை......
      July 31 at 1:16pm · · 1
    • Kiruba Pillai பகலும் இருளுக்குள் ...தான் . ....அருமை ..நண்பரே ..
      July 31 at 11:32pm · Edited · · 1
    • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ஒளி....
      அஞ்ஞாதவாசம் போயிற்று..... அருமை
      August 2 at 1:12pm · · 1
    • Jegatheesan Subramaniam மீண்டுமொரு பகல் - ஆனந்தபிரசாத்!
      August 2 at 8:16pm · · 1
    • Vasudevan Kanagasabai கவிதை நன்றாகப் பிடித்திருக்கிறது. காலத்தைப் பற்றிய ஆழமான புரிதலே காலமின்மையைக் காட்டி நிற்கிறது. ஆத்மீகம் என்பதே இருத்தலின் மீதான தொடர்ச்சியான கேள்விகளும் அதிசயிப்புகளும் தான். கவிதைக்கு நன்றி. இப்போது தெருக்கரையோரம் பூத்திருக்கும் மலர்களை இன்னொரு அர்த்தத்துடன் பார்ப்பேன். இதமான வெயில் வேறு காய்கிறது. நல்ல நாளாகட்டும்.
      August 3 at 3:47am · · 2
    • Anand Prasad கருத்துப்பகிர்ந்த அனைத்து
      கவிதையார்வலர்களுக்கும் --- எனது
      விருப்புடன் கூடிய நன்றிகள்.
      August 7 at 7:05pm · · 2
    • Thirumavalavan Kanagasingam ம்... நன்றாயிருக்கிறது. தொடருங்கள்.
      19 hours ago · · 1

No comments:

Post a Comment