Tuesday, September 4, 2012

தேசாபிமானம்...நாட்டுப்பற்று.....இவைகளைப்பற்றி

தேசாபிமானம்...நாட்டுப்பற்று.....இவைகளைப்பற்றி!

 

நிலவு இங்கே வற்றிப்போய்விட்டது
ஒளி வெள்ளம் வடிந்து போய்...
யாரிங்கே கண்ணால் பார்த்தார்கள்?
மாமாங்கமாகிவிட்டது!
நான் புறப்பட்டு வந்தது
வெளிச்சத்திற்காக....
பகலில் சூரியனையும்
இரவில் சந்திரனையும்
மட்டுமே நம்பிக்கொண்டு
தெள்ளோட்டிக்கொண்டிருக்கும்
ஒரு தேசத்திலிருந்து
நான்
தப்பித்துக்கொண்டு வந்தது
அமாவாசை நாட்களில்
ஊரைக்கொளுத்தி
ஒளி கொடுக்கும் இராணுவத்திடமிருந்து
நான்
பிரியாவிடை பெற்று வந்தது
மரணம் வாங்கவென்று
கூப்பன் புத்தகத்தோடு
வரிசையில் காத்திருக்கும்
மனிதர்களிடமிருந்து....
ஆக....நான்
இழந்துவிட்டு வந்தது
தேர்தல்களை மட்டுமே
அதனாலென்ன...
யாராவதொருவன்
எனது வாக்கை போட்டிருப்பான்...
வாக்குரிமை மலிந்த தேசமாயிற்றே?
செத்துப் போனவனும்
எழுந்து வந்து வாக்களித்துவிட்டு
மறுபடியும்
செத்துப்போவான்
சாம்பர் மேட்டிலும்
ஜனநாயகம் சுடர்விடும்
ஜன்ம பூமி.....
எந்த தேசிய
கொடிகளைப் பார்த்தாலும்
என்னை அறியாமல்
எழுந்து நிற்கிறேனே.....போதாதா?
எந்த தேசிய
கீதங்கள் கேட்டாலும்
எண்சாணுடம்புக்குள்
ஏதேதோ செய்கிறதே...
பற்று......பற்று.....
எனக்கு எந்த கடவுளும்
எந்த கடவுச்சீட்டும்
ஒன்று தான்
ஒன்றே குலம்
ஒன்றே புலம்
ஒன்றே மலம்
ஒன்றே சலம்
நானொரு தேசங்களின்
அபிமானி
எனக்கு நானே
விச்வாமித்ரனாகி
எனது கமண்டலத்திலிருந்து
சபிக்கப்பட்ட தண்ணீரை
எனது தலையிலேயே
தெளித்து.......
ஆனந்தபிரசாத்.
  • 2 shares2 shares
    • August 24 at 10:12pm · · 2
    • Sudhakar Pandian எனக்கு நானே

      விச்வாமித்ரனாகி

      எனது கமண்டலத்திலிருந்து

      சபிக்கப்பட்ட தண்ணீரை///
      August 24 at 10:13pm · · 6
    • Bala Durairajan its very nice to read but its heavy after ending the poem...something tells inside me...!
      August 25 at 1:33am · · 1
    • Balan Tholar செத்துப் போனவனும்

      எழுந்து வந்து வாக்களித்துவிட்டு

      மறுபடியும்

      செத்துப்போவான்
      August 25 at 4:33am · · 1
    • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan கனக்கிறது மனது எமது இயலாமைகளை நொந்து..
      August 25 at 1:07pm · · 1
    • Vj Yogesh
      ‎"எந்த தேசிய

      கொடிகளைப் பார்த்தாலும்

      என்னை அறியாமல்
      ...

      எழுந்து நிற்கிறேனே.....போதாதா?

      எந்த தேசிய

      கீதங்கள் கேட்டாலும்

      எண்சாணுடம்புக்குள்

      ஏதேதோ செய்கிறதே.."
      See More
      August 25 at 7:13pm · · 1
    • Pena Manoharan ‎"Naamaarkkum kudiyalloam namanaiyanjoam Narahaththilidarppadoam".My father used to tell me these words of Appar Swamigal,but I am not that much matured even after attaining sweet sugar sixty.Well said Anand Prasad.Nice narration.your dictum is mesmerising.'Sollaatchiyil sokkip poanaen'.Thanks for sharing.I would like to hear more from u.cheers.
      August 26 at 2:27am · · 1
    • Pa Sujanthan எனக்கு நானே
      விச்வாமித்ரனாகி
      எனது கமண்டலத்திலிருந்து
      சபிக்கப்பட்ட தண்ணீரை
      எனது தலையிலேயே
      தெளித்து.....
      August 26 at 1:36pm · · 1
    • Arasan Elayathamby
      ‎" நான் புறப்பட்டு வந்தது

      வெளிச்சத்திற்காக....

      பகலில் சூரியனையும்
      ...

      இரவில் சந்திரனையும்

      மட்டுமே நம்பிக்கொண்டு

      தெள்ளோட்டிக்கொண்டிருக்கும்

      ஒரு தேசத்திலிருந்து "..நல்ல கருத்து
      See More
      August 27 at 11:53am · · 1
    • Rajaji Rajagopalan
      தப்பித்துக்கொண்டு வந்தது
      அமாவாசை நாட்களில்
      ஊரைக்கொளுத்தி
      ஒளி கொடுக்கும் இராணுவத்திடமிருந்து..............// ஆக....நான்
      இழந்துவிட்டு வந்தது
      ...
      தேர்தல்களை மட்டுமே
      அதனாலென்ன...
      யாராவதொருவன்
      எனது வாக்கை போட்டிருப்பான். ...........................//சாம்பர் மேட்டிலும்
      ஜனநாயகம் சுடர்விடும்... ..........................//எனக்கு நானே
      விச்வாமித்ரனாகி
      எனது கமண்டலத்திலிருந்து
      சபிக்கப்பட்ட தண்ணீரை
      எனது தலையிலேயே
      தெளித்து..............................................................// ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒவ்வொரு வரியும் இந்தக் கவியின் மன உளைச்சல்களை என் கண்முன்னே நிறுத்துகின்றது; இந்த உலகோடு எவ்வளவு இறுகத் தன்னைப் பிணைத்துக்கொண்டார் என்பதனையும் தன் ஆத்மாவுக்குத் தானே ஆறுதல் கூறமுடியாமலிருக்கின்றாரே என்பதனையும் அறியத்தருகிறது. மொத்தத்தில் இக்கவிதை அவரின் ஆத்மாவின் ராகங்கள் என்றே நினைக்கிறேன்.
      See More
      August 29 at 12:40pm · · 1


No comments:

Post a Comment