Friday, May 10, 2013

கண்ணுக்குள் ஆடும் நாட்கள்.




கண்ணுக்குள் ஆடும் நாட்கள்

காட்டினுள்ளேயும் பூக்கள்......

சந்தோஷப்பாட்டு கேட்ட காலங்கள்........

வண்ணத்திரையில் என்றும்

வாழும் இலக்கியமாய்.....

சிந்தைக்குள் சொட்டும் தேன் துளிகள்......
(கண்ணுக்குள்)

வெந்து தணிந்தது பூமி....

வெற்றிகள்.... தோல்விகள்.....வேறினி....

நொந்து கழிந்தது போதுமே....

நோக்கு இருப்பினை நாடுமே......

வந்த பாதை வரலாறுதான்.....

வாழும்நாளில் மனம் ஆறும்தான்.....

இந்த நாள் அந்த நாளே.....

இலக்கணமாகும் என்றுமே.....
(கண்ணுக்குள்)

தூரவெளிப் பறவை போலவே...

தோன்றி இருள் கடந்து போகுமே.....

பாரங்கள் நெஞ்சில் எந்த நாளுமே.....

பாதை தொடர்ந்து வந்து வேகுமே....

காரணங்கள் பலவாயினும்.....

காரியங்கள் நடந்தேறுமே......

போரென்னும் பொய்களும் ஒயுமே......

பொன்னான காலங்கள் தோன்றுமே......
(கண்ணுக்குள்)



No comments:

Post a Comment