
பிரமைகளுக்குள்ளால்
ஊடுபாவி நகர்கிறது வாழ்க்கை
ஒளியோடிணைந்த சமாந்தரக்கோடுகளாய்
கண்களில் தெரியும் காட்சிகள்
தெளிவும் குழப்பமும்
வலிவும் நலிவும்
இருப்பும் இறப்பும்
எதிரெதிரான நிகழ்வுகள்
கரையை எத்தியெறியும் அலைகள்
உள்வாங்கும் வேகத்தில்
நிகழ்வுகள் விழுங்கப்படுகின்றன
ஆழ்மனதில் த்சுனாமியாய்
நினைவு பூகம்பம் மட்டும்
அவ்வப்போதில் தலைகாட்டுகிறது
மூளையை கசக்கி எழுதமுயல்வது
முஷ்டி மைதூனம் செய்வதுபோல
வியப்புக்குறி விடைத்தெழுகிறது
மை தீர்ந்துபோன பேனையின்
எஞ்சிய உதிரத்தையும்
உதறி உதறி பதியமுயன்றாலும்...

Anandaprasad













































No comments:
Post a Comment