Tuesday, June 5, 2012

என் முற்றத்தின் இறுதி முத்தம்.



நான் உன்னில்......நீ என்னுள்.....
உமிழ்ந்த அன்பின்
நறுநீர் உறைந்திருக்கும்!!! என்ப தாகத்
தானிந்த நாள்வரையில் தாங்கி வந்தேன்
தறுவாய்கள் தவறாகித் தளர்ந்த போதில்
வானின்றிழிந்த எரி சரங்க ளாலென்
வாழ்வுருகிப் போனதென விருத்தம் பாட
ஏனிங்கு விண்முகடும் எரிந்த நீயும்
இயலாமை சொல்லியெனை ஏங்க வைத்தாய்?
ஓசையில்லா என்மனதைச் சொல்ல வென்றென்
ஓசைகளை வேண்டியொரு யாகம் செய்தேன்
யாசித்தேன்....பாஷைகளை.......திறந்து போடு!
யாருடனும் பேசவொரு ஏது வாகும்
வாசிப்பிற் குழலாகும்.....வளைந்து போகும்
வசிப்பிற்கும் வலியதொரு வழிய தாகும்
நேசிப்பில் நீர்சுரக்கும்....நேத்திரங்கள்
நின்றுநெடு நாள்கடக்கும்......நீடு வாழும்!
சூழ்நிலையின் சூக்க்ஷூமத்தால் நானோர் கைதி
சுந்தரங்கள்....சுதந்திரங்கள் சிதைந்த போதும்
வாழ்முனைப்பு வேறுவழி யின்றி ஏகும்
வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்!!!
காழ்ப்புமனப் படுதாவில் கவிதை தீட்ட
யாப்புமனம் ஒண்ணாது.........யந்திரம் போல்
ஆழ்மனத்தே நீயுமிழ்ந்த அதர பானம்
ஆற்றுப்படுத்துமென ஆறி நிற்பேன்.
ஆனந்தபிரசாத்.


  • 3 shares3 shares
    • Sriranjani Vijenthira சோகமும் காதலும் ---- நன்றாக இருக்கிறது
      May 26 at 10:48pm · · 1
    • Vj Yogesh ‎"ஓசையில்லா என்மனதைச் சொல்ல வென்றென்

      ஓசைகளை வேண்டியொரு யாகம் செய்தேன்

      யாசித்தேன்....பாஷைகளை.......திறந்து போடு!" ......................." நேசிப்பில் நீர்சுரக்கும்....நேத்திரங்கள்

      நின்றுநெடு நாள்கடக்கும்......நீடு வாழும்! இவ் வரிகளில் வழுக்கி வீழ்ந்தேன் bro!!
      May 26 at 11:19pm · · 1
    • Cheran Rudhramoorthy பிரசாத், "சுந்தரங்கள்....சுதந்திரங்கள் சிதைந்த போதும்" என முடிக்க வேண்டாம்:இதோ மீதி:
      May 27 at 12:30am · · 2
    • Cheran Rudhramoorthy சுந்தரங்கள் சுதந்திரங்கள் சிதைந்த போதும்
      தந்திரங்கள் எப்போதும் கவிஞர்க்குண்டு! அந்தரத்தில் ஆடுவது காதல் அல்ல; ஓசையிலும் காமம் உண்டு ;உனக்கும் உண்டு!வெந்தழியும் உடம்பென்பார் அவர்;நான் ஒப்பேன்;வேறுவகைக் காமம் உண்டு; வேறும் உண்டு!!!!
      May 27 at 12:39am · · 4
    • அந்தரத்தில் ஆடுவது காதல் ..............................
      May 27 at 1:22am ·
    • Thiru Thirukkumaran நேசிப்பில் நீர்சுரக்கும் நேத்திரங்கள்
      நின்றுநெடு நாள்கடக்கும் நீடு வாழும்!// வாழும்..
      May 27 at 4:40am · · 1
    • Amalraj Francis அருமை
      May 27 at 11:15am · · 1
    • Abdul Nazeer · Friends with Memon Kavi and 2 others
      I really enjoyed reading this poem. Lovely!
      May 27 at 11:46am · · 1
    • Kannathasan Krishnamoorthy ‎'சுதந்திரங்கள் சிதைந்த போதும்
      வாழ்முனைப்பு வேறுவழி யின்றி ஏகும்
      வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்'அருமை
      May 27 at 7:54pm · · 2
    • Anand Prasad Cheran Rudhramoorthyகற்றார்க்குக் கற்றாரில் காமம் உண்டென்
      கால் தழைத்த மண்ணில் மிகக்காமமுண்டு
      மற்றாங்கே மீளவொரு காமமுண்டு.....
      மறைந்தால் என் மண்தழுவும் காமமுண்டு.
      நன்றி சேரன்.
      May 27 at 10:22pm · · 5
    • Emiliyanus Judes அன்பின்

      நறுநீர் உறைந்திருக்கும்
      May 29 at 2:34am · · 1
    • ஏன் இப்படி கண்ட இடத்தில் வாயை வைப்பானேன். அப்புறம் புண்ணாய்ப் போச்சுன்னு புலம்புவானேன்.
      May 29 at 4:58am ·
    • ஏம்பா இப்படி வடிவேலு ரேஞ்சுக்கு உள்ளே வந்து தொந்திரவு பண்ணுகிறாய் என்று திட்டாதீங்க.
      May 29 at 5:00am ·
    • பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
      வாலெயிறு ஊறிய நீர்.
      May 29 at 8:05pm ·
    • Anand Prasad Ashokha Thegreateதங்கள் உலகம் தழுவிய தமிழறிவுக்கும்.......
      இலக்கியம் சார்ந்த புரிந்துணர்விற்கும்......
      வடிவேலை மிஞ்சிய கடிவேலனாக நீங்கள்
      பரிணமித்ததற்கும் எந்தன் முடிதாழ்த்தி வணங்குகிறேன்!!!
      அறிவில் ஆதவன் நீங்கள்.
      அயல்வளவு மேய்ந்து
      குறிப்பெழுதிப் போன குரு!!!
      May 29 at 9:26pm · · 1
    • என்வளவுச் சூரியஒளி, அயல்வளவுச் சூரியஒளி என்றில்லை நண்ப, குறளும் யார் வளவிற்குரியதுமல்ல. தங்கள் கவிதையில் தொக்கிநிற்கும் சமூக அக்கறையையும் கண்டிருந்தேன். பாராட்டவே குறள் பதிந்தேன்.
      May 29 at 9:36pm · · 1
    • Anand Prasad என் மனவுணர்வின் வெளிப்பாடான இவ்வரிகளை
      வரித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
      உங்கள் மனவீணையில் ஒருஸ்வரமாவது அதிருமேல்
      தங்கும் மனத்தின் தவம்.
      May 29 at 10:04pm · · 1
    • உங்கள் மொழியாளுமை மகிழ்விக்கிறது. உணர்வுகளை காட்சி செய்யும் வல்லமை பாராட்டுக்குறியது.
      Yesterday at 12:37am via mobile · · 1
    • Pa Sujanthan வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்!!!
      காழ்ப்புமனப் படுதாவில் கவிதை தீட்ட
      யாப்புமனம் ஒண்ணாது.........யந்திரம் போல்
      ஆழ்மனத்தே நீயுமிழ்ந்த அதர பானம்
      ஆற்றுப்படுத்துமென ஆறி நிற்பேன்.
  •  

Wednesday, May 9, 2012

புதை மணல்

இருளில் கிடந்த என்நெஞ்சக்குழிக்குள்ளே
இரைதேடிச்சிறகடிக்கும்
வெளவால்களாகி......
இருபத்திரண்டு
இசைச்சுரங்கள் எதிரொலியில்
குறிப்பில்லாது.....இறகொடியாமல்
பறந்ததென் சிறிய ஆத்மா
பகைச்சுரங்களால் பழுதுபடாது......உன்
நகைமுகத்தின் வெளிச்சத்தால்
புதிய கூர்ப்படைவேன்......
புலர்வேன்....என நினைத்தேன்!
காலம் குதப்பிக்
களித்த சிறுவெற்றிலை நான்
ஞாலம் சிவக்கும்....என்னும்
நம்பிக்கை வெற்றிடம்தான்
பிரக்ஞைகளுள் ஊடுபாவி
பிறழ்ந்த வாழ்வின் கூறு
விருட்சமாய் வேரூன்றி விகசிக்கும்.....
என நூறு
நம்பிக்கை உந்துதலில்
நாள்கடத்தி....நாளாக......
வெம்பி குலையிழந்த வெறும்பழமாய்...
பண், சுரங்கள்
அற்றுக் கனவாகி அறுந்துவென் சங்கீதம்
உற்ற இசையிலையும்
உதிர்ந்துவிட
நா வரண்டென்
துருப்பிடித்த சொற்களால் உன்
துயர் கீற......துவண்டாலும்
நெருப்பாகித் தீய்க்காது
நியமத்தின் நிஜமறிந்தாய்
உற்ற பொழுதுகளில்
உடனிருந்தென் ஆழ்மனதை
தொற்றிப் படர்ந்து
தொகை தொகையாய் அன்படர்ந்த
கொடியானாய்......நானொருவன்
*கோவேறு கழுதைகளில்
முடியாத பயணத்தை
முன்னெடுத்தேன்.....எனது ரயில்
தண்டவாளத்தை யாரோ
தடம்மாற்றிவிட......தியங்கி
பிண்டமாய் வேற்றுலகின்
புறம்போக்கு நிலம் பிளந்த
புதை மணலில் காலிடறிப் புகுந்தேன்
புலம் பெயர்ந்தேன்
கதை இதுதான்.... எனிலுமோர்
கனவுண்டு....நான் சொந்த
மண்ணுள் புதைந்து
மறைவேனேல்.....என் ஜீவன்
புண்ணுள் முகிழ்த்த புழு!

[*எண்பதுகளில் Over land ஆக
நாடு கடந்து காடு கடந்து
கப்பலிலும் குப்பத்திலும்
வேலைதேடியலைந்தவர்கள்
Yugoslavia வழியாக கழுதைகளில்
வைக்கோல்போருக்குள்ளே
மறைத்துக்கடத்தப்பட்டு
Greece நாட்டுக்குள் தள்ளிவிடப்பட்டார்கள்.
இவர்கள் பட்டதுயர் சொல்லி மாளாது.
இன்றும் நாங்கள் சந்திக்கும்போது
''Donkey flight இல் வந்தோம் மச்சான்"
என்று பெருமை பேசிக்கொள்வோம்.]
ஆனந்தபிரசாத்.

Pena Manoharan ‎'காலம் குதப்பிக் கழித்த சிறுவெற்றிலை நான்',','எனிலுமோர் கனவுண்டு என் சொந்த மண்ணில் நான் மறைவேனேல்' அருமையான,ஆழமான வலி தரும் வரிகள்.வாழ்த்துக்கள்
Nadchathran Chev-Inthiyan


‎*எண்பதுகளில் Over land ஆக
நாடு கடந்து காடு கடந்து
கப்பலிலும் குப்பத்திலும்
வேலைதேடியலைந்தவர்கள்
Yugoslavia வழியாக கழுதைகளில்
... வைக்கோல்போருக்குள்ளே
மறைத்துக்கடத்தப்பட்டு
Greece நாட்டுக்குள் தள்ளிவிடப்பட்டார்கள்.
இவர்கள் பட்டதுயர் சொல்லி மாளாது.
இன்றும் நாங்கள் சந்திக்கும்போது
''Donkey flight இல் வந்தோம் மச்சான்"
என்று பெருமை பேசிக்கொள்வோம்.


Thiru Thirukkumaran காலம் குதப்பிக்
களித்த சிறுவெற்றிலை நான்
கதை இதுதான் எனிலுமோர் கனவுண்டு
நான் சொந்த
மண்ணுள் புதைந்து
மறைவேனேல் என் ஜீவன்
புண்ணுள் முகிழ்த்த புழு!// நீங்கள் எழுதிய கவிதைகளில் என் மனசைத் தொட்ட கவிதை


Sugan Kanagasabai


இருத்தலிற்காய்
***********************
இந்தப் பனிமலையின் இடுக்களூடு
இடுப்பில் இரண்டு குழந்தைகள் ஏந்தி
இவ் இருளும் பொழுதைக் கடந்துவிட்டாலோ
... இத்தாலி வந்துவிடும் என்ற மொழி கேட்டு
எட்டி வைக்கின்ற கால்கள் தளர
இறந்த குழந்தைகள் கதை அறிவார்கள்

தீவுகள் சமுத்திரம் பெருநிலப் பரப்புகள்
திக்கொன்றாக இருக்கிற உறவுகள்
தேடி அலைந்தும் துரத்தப்பட்டும்
பைத்தியம் பிடித்தும் பாதியில் திரும்பியும்
திருப்பியும் திருப்பியும் வெளிக்கிடுகின்றார்
இருத்தலிற்காய்.


Kiri Santh பறந்ததென் சிறிய ஆத்மா

பகைச்சுரங்களால் பழுதுபடாது//புதிய கூர்ப்படைவேன்......

புலர்வேன்......



Thirumavalavan Kanagasingam ‎//காலம் குதப்பிக் களித்த சிறுவெற்றிலை// //வெம்பி குலையிழந்த வெறும்பழமாய்// //புண்ணுள் முகிழ்த்த புழு!// புதியாய் அழகாய் புலர்வாய் கவியே!

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ‎"..புறம்போக்கு நிலம் பிளந்த
புதை மணலில் காலிடறிப் புகுந்தேன்
புலம் பெயர்ந்தேன்.." புலம்பெயரலின் வலி அழுத்தமாக வந்திருக்கிறது.

Vj Yogesh அனுபவித்தவைகளை அனுபவித்து எழுதும் போது தான் கவிதைக்கென தனிக் களை கிடைக்கிறது... நெஞ்சைத் தொ(சு)டும் கவிதை bro!
 

Pa Sujanthan ‎//காலம் குதப்பிக்

களித்த சிறுவெற்றிலை நான்

ஞாலம் சிவக்கும்....என்னும்

நம்பிக்கை வெற்றிடம்தான்// supper.

Kiruba Pillai என் சொல்வேன் வார்த்தைகளில் ....வேதனைகளும் உங்களிடத்தே சோக இசையாக மீண்டும் இருபத்திரண்டு இசை ஸ்வரங்களோடு...

Kiruba Pillai


என்னோடு வாழும் என் இசையே ..
துன்பங்களின் உள்ளே ஸ்வரமாகி
இன்பங்களின் கீற்றாகி ... அன்பிலே இழையாகி
ஆசைகளிலே கடலாகி .. என்னை நிறைத்த என் இசையே...
என்னோடு பிறந்தாய் ... என்னோடு மகிழ்ந்தாய் என்னோடு வளர்ந்தாய் ..
... என்னிலே இழைந்தாய் ...நீ இல்லையேல் நானில்லை...
ஆழ குழியினிலே ...இதயம் தாள வீழ்ந்த போதெல்லாம்
தாங்கி பிடித்த கருணை ஸ்வரமே ...
நான் நானாக நீயன்றி வேறில்லை ......


Kiruba Pillai நானும் சேர்ந்து கொள்கிறேன் கவிஞரே ..

Amalraj Francis அருமை சார்.. வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.

Subramaniam Kuneswaran Sugan Kanagasabai எடுத்துக்காட்டிய செழியனின் கவிதைவரிகளும் ஆனந்தபிரசாத்தின் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வாசிக்கக் கிடைத்த வரிகளும் புலப்பெயர்வின் துயரங்களைச் சொல்லும் உன்னதமான கவிதைகள் என நினைக்கிறேன்.

Tamilnathy Rajarajan ‎///காலம் குதப்பிக்
களித்த சிறுவெற்றிலை நான்/// நாம் எல்லோரும்:((((


Kiruba Pillai புண்ணுள் முகிழ்த்த புழு..வை .. புதிதாய் புரிந்தேன் ... வாழ்த்துக்கள் கவிஞரே ...

Anand Prasad என் மனத்தெரிச்சலை உள்வாங்கிக்கொண்ட
அனைத்துக் கவிமனங்களுக்கென்
ஆத்மார்த்தமான நன்றி.
எரித்தால் எழுதுங்கள்.....
எரிந்தால் எழுதுகிறேன்!!!
என் மண்ணுக்கும்...
என் மனதுக்கும் சேர்த்து.












 

High jump (An episode of human heights! )


With the use of my bare feet
I used to jump up and down
on to the non pesticide lawn
pass the hurdle safe and sound
Eventually.. progressively... I was
evaluated by my teacher
increase the level of height
that awaits for me to departure
Hopes and dreams were
flushed though my veins
I was all set to be.......
to bear the physical pain
working harder again and again....
to accomplish this mission in order
nothing else other than my ambition
mind has led it cross the border
Encouragement elevates me
to get all the way to the height
Imagination winged up above my sight
anxiously await to obtain
the ultimate gold medal
my teacher put me through
all the way to saddle
Imaginary wings flawlessly flown
Childishly....
I was thinking the victory soon!
Again and again I was working hard
to jump up and up the height
Unexpectedly something has happened
which was absolutely not right
as I was a promising candidate
in order to defeat my opponent
drastically my teacher told me
"this is something important
Sunny boy,
unfortunately you can't
compete to the finals
there is another boy who can
accomplish all the highness"
stunned........ at first
stubborn to get to know the rest
Never being explained
the reason of my rejection
it took me ten years to
understand the projections
No matter whatever you do
you belong to an unknown caste
Jumping up and down
just a dream that's all that costs!!
N.B_ a haunting memory sitting in my head
when I was a student in Jaffna Central college
poured it through my inefficient words
might give me peace for the rest of my age.
Anandprasad.
Kiruba Pillai ‎"this is something important
Sunny boy,
unfortunately you can't
compete to the finals
there is another boy who can
accomplish all the highness"// mm sad .. dont worry ..
Pena Manoharan Hope you have cleared all hurdles[bars] and reached pinnacle.bravo anandprasad.
Vasantha Krishnan A haunting memory.....We all must have experienced this kind of encounter by ignorant people at one time or other.Now that we have come out of their dark hole and saw the sun shining, it's the time to look back and feel sorry for them.

 
Unexpectedly something has happened

which was absolutely not right

as I was a promising candidate
...
in order to defeat my opponent

drastically my teacher told me

"this is something important

Sunny boy,

unfortunately you can't

compete to the finals

there is another boy who can

accomplish all the highness"

stunned........ at first!
Vj Yogesh It's a very nice recollection bro! There are so many hurdles to be passed in the life....
Jegatheesan Subramaniam Conquered every heart poetically!Congratulation.



Sunday, April 15, 2012

வருகைக்காக........


பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!
உம்முடைய சித்தம்
பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல
பூமியிலும் செய்யப்படுவதற்கு
உமது ராஜ்யம் மீண்டும் இங்கே
வரவேண்டும் ஆண்டவரே!!
இயேசு கிறிஸ்துவே!
பரிசுத்த ஆவியினால் நீர்அவதரித்த குற்றத்திற்காக
''பெத்தலஹேமில் அனைத்து
பாலகர்களின் உயிர்களை
பறி...சுத்தமாய்!''என்றான்
ஏரோதென்னும் எருது.
இந்தவிதி இன்னும் அமுலிலுண்டு.
தனியொருவன் பாதுகாப்புக்கு
பால கவசம்
துப்பாக்கி வெடிகுண்டு
பாலகர் வசம்
துர்ப்பாக்கிய ஜனங்களோ
சுத்தமாக்கப்பட்ட பறிகளோடு
அகதி முகாம்களில் வாசம்.
உம்மை அறைவதற்கான
சிலுவையை
உம்மைக்கொண்டே
சுமக்கவைத்தனர் பாவிகள்
இந்தப்பழிக்காக
உலகப்பரப்பின்
ஒவ்வொரு புறத்திலும்
நமக்குரிய குழிகளை
நாமே தோண்டிக்கொண்டிருக்கிறோம்
நம்மைக்கொல்வதற்கான ஆயுதங்களை
நாமே சுமந்துகொண்டலைகிறோம்
உமது தேவாலயங்களில்
நமது ஜீவிதங்கள்.
நீர் மேய்த்துச்சென்ற
ஆடுகளுக்குக்கிடைத்த
தேவ நற்கருணைகூட
மனிதருக்கு கிடைக்கவில்லை
கர்த்தரே உம்மை
விசுவாசிப்பவர்கள் இருக்கிறார்கள்
விற்பவர்களோ..... பெருக்கிறார்கள்
உலகம் பொய்யில் உருள்கிறது
உண்மை ஒருபுறத்தே உழல்கிறது
வெள்ளியை குகையும்
பொன்னை ஸ்புடமும்
சோதிக்கும்
கர்த்தரே நீரன்றோ
ஹ்ருதயங்களை
சோதிக்கிறீர்?
இந்த விகாரங்கள் தெரியவில்லையா?
துன்மார்க்கனை
நீதிமானாக்குகிறவனும்
நீதிமானை
குற்றவாளியாக்குகிறவனும்
தங்களுக்கு
அருவருப்பானவர்களல்லவா?
அதிகாரம் இங்கு
அதைத்தானே செய்கிறது?
பிலாத்து ராஜ்யங்கள்
பெருகிப்போய்விட்டன
பரபாஸின் வம்சமோ
உலகின் மூலை முடுக்கெல்லாம்
கொள்ளையடிக்கிறது
குண்டு வெடிக்கிறது
கொன்று தள்ளுகிறது.....
நியாயம் கேட்டவன்
கொல்கோதாவுக்கு
கொண்டுபோகப்படுகிறான்
வேதபுத்தகத்தில் எழுதியிருக்கிற
சாபங்களெல்லாம்
இந்த தேசங்களின் மேல்
மீண்டும் வந்திருக்கிறதே!
எப்போது அவர்களைக்
கோபத்தினாலும்
உக்கிரத்தினாலும்
மகா எரிச்சலினாலும்
அவர்களுடைய தேசத்திலிருந்து
வேரோடு பிடுங்கி எறியப்போகிறீர்கள்?
சோதோமையும் கொமேராவையும்
அத்மாவையும் செபோயீமையும் போல்
எப்போது இவர்கள் தேசங்களையும்
கவிழ்த்துப்போடப்போகிறீர்கள்?
அநியாயம் செய்கிறவன்
இன்னும் அநியாயம் செய்யட்டும்
அசுத்தமாயிருக்கிறவன் இன்னும்
அசுத்தமாயிருக்கட்டும்
நீதியுள்ளவன் இன்னும்
நீதி செய்யட்டும்
பரிசுத்தமுள்ளவன் இன்னும்
பரிசுத்தமாகட்டும்( வெளி.22.11 )
உண்மையும் சத்தியமுமாய்
நீதியாய் நியாயந்தீர்க்க
கண்களில் அக்னிஜுவாலையோடு
சிரசின்மேல் அநேக கிரீடங்களோடு
இரத்தத்தில் தோய்ந்த
வஸ்திரமணிந்துகொண்டு
தேவனுடைய வார்த்தை என்கிற
நாமத்தை சுமந்துகொண்டு
வெள்ளைக்குதிரையின்மேல்
உமது வருகைக்காய்......
எனது சவப்பெட்டியின்
கடைசி ஆணியை
அறைவதற்கு முன்புவரை
பிரகாசமான நட்சத்திரத்தை தேடி......
கர்த்தரின் ராஜ்யமும்
கல்கி அவதாரமும்
நிகழப்போவதை
நம்பிக்கையோடு.......
ஆனந்தபிரசாத்.


George Singarajah I thank you for this wonderful post. Thanks. Thank you friend.



Parthiban Shanmugam Anand always rocks !!!
.



Vj Yogesh ‎"உம்மை அறைவதற்கான

சிலுவையை

உம்மைக்கொண்டே

சுமக்கவைத்தனர் பாவிகள்

இந்தப்பழிக்காக

உலகப்பரப்பின்

ஒவ்வொரு புறத்திலும்

நமக்குரிய குழிகளை

நாமே தோண்டிக்கொண்டிருக்கிறோம்..." அண்ணா, உங்கள் எழுத்துக்களில் என்னை ஈர்ப்பது யதார்த்தமாய் விடயங்களைப் பகிர்வது தான்....
இங்கும் வரிக்கு வரி கவிச் சாட்டை வீசியிருக்கிறீர்கள்...!!




ல்ஞ்ச்மும் ஊழ்லும் பொய்யும் பித்தலாட்டமும் காம வெறியும் வாழ்விற்க்கா த அத்த்னை பித்தலாட்டங்களும் தலைவிரித்தாடும் உலகில் ஏசு சொன்னது போல பாவம் செய்யாதவர்கள் யாராவது இருந்தால் முதல் கல் எறியட்டுமே மற்றவர்கள் பின் தொடராலாம்


Shalini Padma
ஈஸ்ட்டர்
==========
சிலுவைகல்
சரித்திரத்தின்
வெற்றுப்புள்ளிகல்.
நாம்
உயிர்த்தெழுப்பிக்க
காட்சியை.


இல்லை ஷாமினி பத்மா இவை முற்றுப்புள்ளியாக வேண்டும் என்பதே மனிதர்களின் எதிரொபார்ப்பு

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் .


நன்றி ஷாலினி பத்மா


Kiri Santh ‎''பெத்தலஹேமில் அனைத்து

பாலகர்களின் உயிர்களை

பறி...சுத்தமாய்!


Kiruba Pillai ஆமென்... கலங்கி தான் போனேன் ... உங்கள் வரிகளில் . ஜேசுவை விட துன்பம் அடைந்தவர் இந்த உலகில் உண்டோ அவர் தேவ குமாரன் .. துன்பத்தை தாங்கும் வலிமையுல்லவர் ..பிறருக்காக.. எம் மண்ணிலே எத்தனை தேவ குமாரர்கள் ...அவதரித்தார்கள்... பெசப்படாமலேயே அமுக்க பட்டார்கள்...